கும்பகோணம், பிப்.27- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கொத்தங்குடியில் வைக்கோலை ஏற்றிக்கொண்டு நாமக் கல் சென்ற வேன் தாழ்வாக தொங்கிய மின் கம்பியில் உரசி தீ பற்றியது. இதுகுறித்து கும்பகோணம் தீய ணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைக் கப்பட்டது. இந்நிலையில், சாலை மற்றும் வீடுகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக மின்சார வாரியம்அப்புறப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.