districts

திருச்சி முக்கிய செய்திகள்

குடிநீர் வசதி கேட்டு  ஆட்சியரின் வாகனத்தை மறித்த மாற்றுத்திறனாளி பெண்

புதுக்கோட்டை, செப்.12 - குடிநீர் வசதி கேட்டு மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர்  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் காரை மறித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள  போரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி. மாற்றுத்திற னாளியான இவர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆட்சியரின் காரை மறித்து திங்கள்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், “மாற்றுத்திறனாளி யான தனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்கிறார். தனது குடும்பத்திற்கு குடிநீர் குழாய் பதிக்கவும், பாதை வசதி ஏற்படுத்தி தருமா றும் ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பலரிடம் மனு  அளித்துள்ளோம். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் குடிக்கக்கூட தண்ணீரின்றி  நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம்” என்றார். அவரின் புகார் மனுவை படித்துப் பார்த்த மாவட்ட  ஆட்சியர், இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். பின்பு, அந்த மாற்றுத்திறனாளிப் பெண் போராட்டத்தை கை விட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற அழைப்பு

திருவாரூர், செப்.12 -  மகளிர் திட்டம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி  இணைந்து நடத்திய அடல் ஓய்வூதிய திட்டம் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் தண்டலை  ஊராட்சி, விளமல் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை வகித்து பேசுகையில், “60 வயதிற்கு மேல் வேலை பார்த்து  வருமானம் ஈட்டுவது என்பது முடியாத ஒன்று. 60 வய திற்கு மேல் நமக்கு தேவைப்படும் தொகையினை பெறு வதற்காக அடல் ஓய்வூதியத் திட்டத்தை அரசு வழங்கி யுள்ளது.  இத்திட்டத்தில் சந்தாதாரர் தேர்ந்தெடுக்கும் திட்டம் மற்றும் உரிய காலத்தில் அவர் முறையாகக் கட்டும் தொகையைப் பொறுத்து ஓய்வூதியத் தொகை ரூ.1000,  ரூ.2000, ரூ.3000, ரூ.4000 மற்றும் ரூ.5000 என கிடைக்கும்.  வருமான வரி கட்டாத, 18 முதல் 40 வயது வரையுள்ள எவ ரும், வங்கிக் கிளை, தபால் அலுவலகம் அல்லது மின்னணு  முறையில் இத்திட்டத்தில் சேரலாம்.  இதற்கான விண்ணப்ப படிவத்தில் பென்சன் தொகை,  சந்தா செலுத்தும் காலம் ஆகியவற்றைப் பூர்த்தி செய்து  அளிக்க வேண்டும். சந்தாத் தொகையினை மாதம், காலாண்டு, அரையாண்டு காலத்தில் சேமிப்புக் கணக்கி லிருந்து தன்னிச்சையான பற்று (Auto Debit) முறை யில் செலுத்த வேண்டும். இதுபோன்ற திட்டங்களில் அனைவரும் பயன்பெற வேண்டும்” என்றார். நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) வடிவேல், இந்தியன் வங்கி தலைமை மண்டல மேலாளர்  நாகேஷ்வரராவ், மண்டல பொது மேலாளர் பிரியங்கா குப்தா மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர் குழு உறுப்பி னர்கள், வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டு நலப்பணித் திட்ட துவக்க விழா
தஞ்சாவூர், செப்.12 - மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக, மருதுபாண்டியர் கல்லூரியில் செயல் பட்டு வரும் நாட்டு நலப்பணித் திட்ட அலகுகளுக்கான துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி யில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கொ.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பூண்டி புஷ்பம் கல்லூரியின் வேதியியல் துறைப் பேராசிரிய ரும், நாட்டுநலப் பணித் திட்ட அலுவலருமான பேரா.தி. பெரியதம்பி கலந்து கொண்டு உரையாற்றினார்.

செருகுடியில் வாலிபர் சங்க  புதிய கிளை துவக்கம் 

கும்பகோணம், செப்.12- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் செருகுடி கிராமம் இந்திரா நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புதிய  கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவில் சங்க கொடியை மாவட்டத் தலைவர் கே.அருளரசன் ஏற்றி  வைத்து சிறப்புரை ஆற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் ராமன்,  ஒன்றியத் தலைவர் வீரக்குமார், செயலாளர்  பிரேம்நாத், பொருளா ளர் ஆதித்யன், துணைச் செயலாளர் வெங்கடேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியப் பிரியன், கிளைச் செயலாளர் திவாகர் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்
 

பாபநாசம், செப்.12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மைக் குழுத்  தலைவி முத்துலட்சுமி தலைமை வகித்தார். இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத குழந்தைகளை பள்ளிக்கு வர வைப்பது என  தீர்மானிக்கப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியர் மணியரசன், உதவி  தலைமையாசிரியர் லோகநாதன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர் பிரதிநிதி செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தேசிய மக்கள் நீதிமன்றம் 
 

பாபநாசம், செப்.12 -  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதி மன்றம் நடந்தது. பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவி யல் நீதித் துறை நீதிபதி அப்துல் கனி தலைமை வகித்தார். நிலுவையில் உள்ள வழக்குகள், குற்றவியல், குடும்ப நல வழக்கு கள் மற்றும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு தீர்வு காணப்பட் டது. பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின்  அமர்வுகளிலும் விசா ரணை நடந்தது. இதில் 459 வழக்குகளில், 186 வழக்குகளுக்கு தீர்வா னது. இதன்மூலம் வழக்காளிகளுக்கு ரூ.30.27 லட்சம் இழப்பீடு மற்றும்  தீர்வுத் தொகையாக பெற்றுத் தரப்பட்டது. பாபநாசம் வட்ட சட்ட பணிக்  குழு உறுப்பினர் வழக்கறிஞர் சங்கர் மற்றும்  வழக்கறிஞர்கள், நீதிமன்ற  பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.

விவசாயி வெட்டிக் கொலை

அறந்தாங்கி, செப்.12 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுகா பட்டத்தூரணியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துநாதன். இவருக்கு புதுக்கோட்டை மாவட்டம்  அறந்தாங்கி தாலுகா ஆயிங்குடி வடக்குப் பகுதியில் சொந்தமாக தென்னந்தோப்பு உள்ளது. இவர், இந்தத் தோப்பில் ஆடு, மாடுகள் வளர்த்து வருவதோடு, இரவு நேரத்தில் தென்னந்தோப்பிற்கு காவ லாக இருந்து வந்துள்ளார். தினசரி காலை வழக்கம்போல் வீட்டிற்கு வந்துவிட்டு செல்வார். திங்களன்று இரவு தென்னந்தோப்பிற்கு சென்ற நிலையில், செவ் வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் முத்துநாதன் வீட்டிற்கு வர வில்லை. இதனால் சந்தேகமடைந்த முத்துநாதனின் சகோதரர் தென்னந் தோப்பிற்கு சென்று பார்த்த போது தலை, கை, கால் பகுதிகளில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் முத்துநாதன் சடலமாக கிடந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த முத்துநாதனின் சகோதரர் உடனடி யாக அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவ லின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அறந்தாங்கி போலீசார் முத்துநாத னின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் கேட்பது போல் நடித்து  பெண்ணிடம் நகை பறிப்பு

திருச்சிராப்பள்ளி, செப்.12 - திருச்சி மேலகல்கண்டார் கோட்டை காருண்ணிய நகர பகுதியைச்  சேர்ந்த வீரராகவன் மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி (50). வீரராகவன் வழக்கம்போல் அதிகாலையில் எழுந்து மார்க்கெட் வேலைக்கு சென்று விட்டார். அதைத் தொடர்ந்து சிவகாமி வீட்டில் தனி யாக இருந்தார். அப்போது முன்னெச்சரிக்கையாக வீட்டின் முன்பக்க கதவை பூட்டியிருந்தார்.  இந்நிலையில் பிற்பகலில் வீட்டின் கதவுகள் தட்டப்பட்ட சத்தம் கேட்டு சிவகாமி வெளியே வந்தார். அப்போது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த 2 வாலிபர்கள் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து சிவகாமி தண்ணீர் எடுக்க சமையலறைக்குச் சென்ற அடுத்த  நொடியே, அந்த மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று சிவ காமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு  தப்பி ஓடினர்.  இதுகுறித்து சிவகாமி திருவெறும்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க அமைப்பு தினம்

மயிலாடுதுறை, செப்.12 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் தமிழ்நாடு ஊரக  வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க 37வது அமைப்பு தினத்தை யொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் அமைப்பின் கொடி ஏற்றப் பட்டது. கொடியை வட்டாரத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி ஏற்றி வைத் தார். அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் பொன்.ராஜேந்தி ரன், மாவட்ட பொருளாளர் மாரி தட்சிணாமூர்த்தி, வட்டாரச் செயலாளர் க.மாதவன்ராஜ் மற்றும் மாவட்ட, வட்டார நிர்வாகிகள், அனைத்து நிலை  உறுப்பினர்கள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வட்டார பொருளாளர் ஆர்.முருகவேல் நன்றி கூறினார்.

தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி

அரியலூர், செப்.12 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கான தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. மாவட்ட சுகாதார நலப்பணிகள் மற்றும் மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணியை, மீன்சுருட்டி  வட்டார மருத்துவ அலுவலர் மேகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் அன்னை தெரசா நர்சிங் கல்லூரி குழுமத்தின் தாளாளர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி, அண்ணா சிலை,  நான்கு ரோடு, கடைவீதி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பேருந்து நிலையம் சென்றடைந்தது. 

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்

தஞ்சாவூர், செப்.12-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில், முன்னாள் முதல்வர் முத்தமிழ றிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம்  தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது. இம்முகாமில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை  பரிசோதனை செய்து மருத்துவச் சான்று  வழங்கினர். அதன் அடிப்படையில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் பட்டது. இம்முகாமில் மாற்றுத்திறனாளி களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அண்ணா, பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கு அழைப்பு

பெரம்பலூர், செப்.12 - தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பில் 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மானி யக் கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக  பாடுபட்ட தலைவஙகளான மகாத்மா காந்தி,  ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாண வர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தற்போது பள்ளிகளுக்கு 15.9.2023  முதல் காலாண்டு தேர்வு நடைபெற உள்ள தால், கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் பேச்சுப் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி,  2023 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப். 15 அன்றும், தந்தை பெரியார்  பிறந்த நாளான செப்.19 அன்றும் அனைத்துக்  கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு தொகைகள் வழங்கப்பட உள்ளன. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் செப்.15,  19 அன்று பெரம்பலூர் பாரத சாரண-சாரணியர்  மாவட்டப் பயிற்சி மையத்தில் (தனலட்சுமி சீனிவா சன் கல்லூரியின் அருகில்) கல்லூரி மாணவர் களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும்  கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000 என்ற  வகையில் வழங்கப்பட உள்ளது. போட்டி  காலை 9 மணிக்கு தொடங்கப்படும். கல்லூரி யில் பயிலும் மாணவ-மாணவிகள் கல்லூரிக்  கல்வி இயக்குநர் வாயிலாக அந்தந்த கல்லூரி  முதல்வரிடம், அனுமதி பெற்று இப்போட்டியில் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரி வித்துள்ளார்.

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம்

கரூர், செப்.12 - தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப் படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல்’ என்ற  விருது வழங்கப்பட உள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படு வோருக்கு தமிழ்ச்செம்மல் விருதும், ரூ.25,000 பரிசுத் தொகை யும் தகுதியுரையும் வழங்கப்படுகிறது.  எனவே கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும் பாடுபடும் தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் வலை தளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக (https://tamilvalarchithurai.tn.gov.in/) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலு வலகத்தில் நேரிலும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களு டன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரிக்கு 10.10.2023-க்குள் அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர்  டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

கொள்ளிடம் மணல் குவாரியில்   அமலாக்கத் துறை திடீர் சோதனை


திருச்சிராப்பள்ளி, செப்.12- திருச்சி, திருவானைக்காவல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி  இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில்  செவ்வாயன்று காலை அமலாக்கத் துறையி னர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டி னம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனை யில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முத்துப் பட்டினம் வீடு, புதுக்கோட்டையில் உள்ள  அவரது அலுவலகங்கள் மற்றும் தமிழகத் தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அமலாக்கத் துறையினர் செவ்வாயன்று முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திருச்சியில் திருவா னைக்காவல் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள மணல் குவாரியில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். நான்கு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு இந்த சோதனையில் ஈடுபட்டது. மணல் குவாரியின் முகப்பு பகுதி யில் இரண்டு அதிகாரிகளும், மணல் குவாரி யின் உட்பகுதியில் இரண்டு அதிகாரிகளும் சோதனை நடத்தினர். நான்கு சி.ஆர்.பி.எப்  வீரர்களின் பாதுகாப்பில் இந்த சோதனை யானது நடைபெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப் பட்ட பண மதிப்பிழப்பின்போது, இவரது  அலுவலகத்தில் வருமான வரித் துறையினர்  ரூ.2000 நோட்டுகளை கட்டு கட்டாக எடுத்துச்  சென்றனர். இதன் காரணமாகவும், அதே போல் தமிழக முன்னாள் மின்சார துறை  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இவருக் கும் நெருக்கம் உள்ளது என்பதாலும், மணல்  குவாரி விசயத்தில் முறையான கணக்கு காண் பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.  இதன் காரணமாகவே, இந்த திடீர் சோதனை  நடத்தப்பட்டதாக தெரிகிறது.