தஞ்சாவூர், டிச.29 - பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை இடித்து விட்டு புதி தாக கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு ஊராட்சி, ஆதி திராவிடர் தெருவில் உள்ள பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம், பாழடைந்த நிலையில், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பழுதடைந்த இந்த கட்டிடத்தில் விஷப்பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளதால் அருகில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும், அந்தக் கட்டடத்திற்கு அருகிலேயே சிறு மின் விசை நீர்த்தொட்டி ஒன்று உள்ளது. அதில் அனைவரும் தண்ணீர் பிடித்து வருகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்தால் தண்ணீர் தொட்டி யும் பழுதாகும். இதனால், தண்ணீர் பிடிக்க வரும் பொது மக்கள் உயிருக்கும் அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள இந்த சமுதா யக் கூடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் சமூக ஆர்வலர் வீரக்குடி ராசா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.