திருவாரூர், மே 9 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம் கொல்லுமாங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட கவுன்சிலர் ஜெ.முக மது உதுமான், தனது சொந்த நிதியில் பசுமை நிழல் பந்தல் அமைத்துள்ளார். தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை வீசுவதால், வெயிலின் தாக்குதலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், கொல்லுமாங்குடி பேருந்து நிலையம் அருகே தனது சொந்த நிதியில் நிழல் பந்தல் அமைத்துக் கொடுத்துள்ளார். கவுன்சிலரின் இச்செயலை பொதுமக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அந்தப் பகுதி மக்கள் பாராட்டினர்.