தஞ்சாவூர், ஜூன் 10- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை யில் உள்ள பேருந்து நிலையத்தில், நகராட்சி நிர்வாகம் சார்பில், சுமார் 100 அடி நீளமுள்ள நகராட்சி விழிப்புணர்வு விளம்பர பிளக்ஸ் போர்டு, அதிராம்பட்டினம் செல்லும் பயணிகள் அமரும் நிழற்குடை யின் முகப்பில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை காலை வீசிய காற்றில், 100 அடி நீளம் உள்ள பிளக்ஸ் போர்டு கழன்று கீழே விழுந்தது. இத னால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சிய டைந்தனர். இருப்பினும் பிளக்ஸ் போர்டு கீழே விழும்போது யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள் பிளக்சை அகற்றிச் சென்றனர். இதில் பொது மக்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படாததால் நகராட்சி அலுவலர் கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதுகுறித்து பயணிகள் கூறுகை யில், “பேருந்து நிலையத்தில் அதிராம் பட்டினம் பகுதிகளுக்கு செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில், பயணி கள் அமரும் வகையில் தகரச் சீட்டில் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் முகப்பில் இரும்பு கம்பிகளில் பொருத்தப்பட்ட சுமார் 100 அடி நீளம் உள்ள நகராட்சி விளம்பரம் பிளக்ஸ் இருந்தது. இது துருப்பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தது. நகராட்சி நிர்வாகத்தினர் இதை கண்டுக் கொள்ளவில்லை. சிறிய காற்று அடித்ததில் கீழே விழுந்துள்ளது. இரும்பு கம்பியில் பொருத்தப்பட்ட பிளக்ஸ் யாரும் மீது விழ வில்லை. இதனால் காயம், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பயணிகள் நிழற்குடை தரமாக உள்ளதாக என ஆய்வு செய்ய வேண் டும்” என்றனர்.