districts

img

தோழர் முருகேசன் 8 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம்

அரியலூர், மே 9 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தை அடுத்துள்ள உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின கொண்டாட்டம் மற்றும் அரியலூர்-பெரம்பலூர் மாவட் டத் தலைவரும் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான மறைந்த முருகேசனின் 8  ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கிளைச் செயலாளர் சேகர் தலைமை வகித்தார். அரியலூர்  மாவட்டத்தைச் சேர்ந்த புகழேந்தி, அன்பழகன், செல்வராசு, கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களான மாநிலக் குழு உறுப்பினர்கள் வாலண் டினா, ஜெயசீலன் ஆகியோர்  சிறப்பு ரையாற்றினர். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா ளர் எம்.இளங்கோவன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஆர்.மணி வேல், ஒன்றியச் செயலாளர்கள் எம்.வெங்கடாசலம், ஜெ.ராதாகிருஷ்ணன், பி.பரமசிவம், பி.துரைசாமி, எம்.கந்த சாமி, இ.பி.கண்ணன், அரியலூர்  ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டி யன், மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து புதுகை பூபாலன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மே தினத் தையொட்டி உட்கோட்டை கிராமத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.

;