நாகர்கோவில், பிப்.11- குமரி மாவட் டத்தில் மீன்பிடி படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய்யை வியாபாரிகள் வாங்கி கேரளத்துக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று (பிப்.10) இரவு புதுக்கடை அருகே உள்ள இனயம் பகுதியில் இருந்து மினி டெம்போ ஒன்றில் மண்ணெண்ணெய் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி செல்வதாக நித்திரவிளை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விரி விளை சந்திப்பு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட னர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கு இடமாக வந்த மினி டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட னர். சோதனையில் அதில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 25 கேன்களில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 875 லிட்டர் மண்ணெண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து காவலர்கள் வாக னத்தை மண்ணெண்ணெய்யுடன் பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைத்த னர்.