districts

img

குளத்தூர் ஜல்லிக்கட்டில் 556 காளைகள் பங்கேற்பு; 35 பேர் காயம்

புதுக்கோட்டை, பிப்.4 - குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற ஜல்லிக்கட்டில் 556 காளைகள் களம்கண்டன. 35 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே குளத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் கொடிய சைத்துத் தொடங்கி வைத்தார். புதுக் கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை,  திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து  வரப்பட்ட 556 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. மருத்து வப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 300 மாடுபிடி வீரர்கள் களமிறக்கப்பட்டனர். பேட்டிகளில் வெற்றி பெற்ற காளை களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப் பட்டன. காளைகள் முட்டியதில் 35 பேர்  காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு  முகாமிட்டு இருந்த மருத்துவக் குழுவினர்  சிகிச்சை அளித்தனர். இதில் படுகாய மடைந்த 6 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டனர்.