சட்ட விழிப்புணர்வு முகாம்
பாபநாசம், மார்ச் 18 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங் குடி ஊராட்சி, எடக்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. திருவையாறு வட்ட சட்டப் பணி குழு சார்பில் வழக்கறிஞர் மேகலா இலவச சட்ட உதவி, அதை அணுகும் விதம் குறித்து கூறினார். ஊராட்சித் தலை வர் பழனி உட்பட நூறுநாள் தொழிலாளர்கள் பங்கேற் றனர்.
போக்சோவில் சிறுவன் கைது
அரியலூர், மார்ச் 18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 18 வயதுடைய இரண்டு சிறு வர்கள், பள்ளி நேரம் முடிந்து, பள்ளியிலிருந்து வெளியே வந்த 16 வயது சிறுமி ஒருவரிடம், காத லிப்பதாக கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித் தார். புகாரின்பேரில் மகளிர் போலீசார், இரண்டு சிறு வர்களில் ஒரு சிறுவன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஒரு சிறுவனை தேடி வருகின்ற னர்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்து
தஞ்சாவூர், மார்ச் 18- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.சி. குமரப்பா பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாண வர்கள் பிரியாவிடை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளா ளர்கள் சங்க நிறுவனத் தலைவருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து, பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் பள்ளியுடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவ- மாணவிகள் சார்பில், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர், ஆசிரியை களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
516 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
புதுக்கோட்டை, மார்ச் 18 - மக்களவைத் தேர்த லையொட்டி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளோர் அவரவர் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் நிலை யான உத்தரவு. இதன்படி, கைத் துப்பாக்கி, நீண்ட துப்பாக்கி போன்ற துப்பாக்கி உரிமம் வைத்துள்ளோருக்கு போலீ சார் முறைப்படி அறிவிப்பு களைக் கொடுத்துள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 518 பேர் துப் பாக்கி உரிமம் வைத்துள்ள னர். திங்கள்கிழமை மாலை நிலவரப்படி இவர்க ளில் 516 பேர் தங்களின் துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்து, உரிய ரசீது பெற்றுச் சென்ற னர். மீதமுள்ள 2 பேரும் வெளியூரில் இருப்பதால் ஓரிரு நாளில் நேரில் வந்து துப்பாக்கிகளை ஒப்ப டைப்பதாக உறுதியளித் துள்ளனர் என போலீ சார் தெரிவித்தனர்.
அபாகஸ் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்கள்
தஞ்சாவூர், மார்ச் 18- யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்காவில் இயங்கி வரும் குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் அமைப்பு, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, ஞாயிறன்று சர்வதேச அபாகஸ் போட்டியை நடத்தியது. இதில் பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 43 மாணவ, மாணவிகளும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் புலவஞ்சி நடுநிலைப் பள்ளி யைச் சேர்ந்த 10 மாணவிகள் உட்பட, 53 மாணவ-மாணவிகள் அபாகஸ் தேர்வு எழுதினர். போட்டியில், தேர்வாகும் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் அடுத்த மாதம் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஜிஏஇ நிறுவனர் பிரஷிதா செய்திருந்தார். சர்வதேச அபாகஸ் போட்டிக்கான தேர்வினை, ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரை யாளர் பால்ராஜ் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி வரவேற்றார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், பேரூராட்சி கவுன்சி லர் ஹபீபா ஃபாரூக், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெசிரா, ஆசிரியர் ஜோதி, ஆகியோர் கலந்து கொண்ட னர்.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துக!
மகளிர் தின திறந்தவெளி கருத்தரங்கம் கோரிக்கை
அரியலூர், மார்ச் 18 - அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உலக மகளிர் தின திறந்தவெளி கருத்தரங்கம் மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி, வாலி பர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் எஸ்.மலர்கொடி வரவேற்றார். கருத்தரங்க நிகழ்ச்சியில் மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்கள் வி. மேரி, எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் டி.அம்பிகா, வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் துரை.அருணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எ.கந்தசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி, விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.செந்தில்வேல் உள்ளிட்டோர் பேசினர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து பணியிடங்களிலும் விசாகா கமிட்டி பரிந்துரையின்படி பாலியல் புகார் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவற்றை முறை யாக செயல்படுத்த ஆவன செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வும், தனியார் கல்விக் கூடங்களின் லாப வெறியை கட்டுப்படுத்தி, அனைவருக்கும் பொதுக் கல்வியை உத்தரவாதப்படுத்த வேண் டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தை கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன் முறைகளைத் தடுத்து நிறுத்த, சட்டங்களை முறையாக அமல்படுத்த வேண்டும். அதிக விபத்துகளை ஏற்படுத்தும் சிமெண்ட் வாகனங்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும். வீடு இல்லாத ஏழை களுக்கு இலவச வீட்டு மனையும், வீட்டு மனை பெற்றவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வும் வழங்க வேண்டும். பாழடைந்துள்ள காலனி வீடுகளை சரிசெய்ய நிதி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். நிர்வாகி ஹேமநந்தினி நன்றி கூறினார்.
பேரவூரணி தொகுதியில் பறக்கும் படை அமைப்பு
தஞ்சாவூர், மார்ச் 18- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கத்தில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக் குட்பட்ட பேராவூரணி சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், முத்திரைத்தாள் கட்டண தனித்துணை ஆட்சியருமான பூஷணகுமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் கண்காணிப்பு குழு, பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது. தேர்தல் முறைகேடுகள், புகார்கள் ஏதும் இருப் பின் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை எண்.04373-232456-க்கு தொடர்பு கொள்ளலாம். பத்திரி கைகளில் வைத்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்வது, பத்திரிகைகளில் வேட்பாளர்கள் விளம்பரம் செய்வது குறித்து முறையாக கணக்கு இருக்க வேண்டும். அது குறித்து கண்காணிக்கப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு கொண்டு சென்றால், பணம் பறிமுதல் செய்யப் படும். நாடாளுமன்றத் தேர்தலை நியாயமாகவும், நேர்மை யாகவும் நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்றார்.
கலைத் திறன் போட்டிகள் கழுமங்குடா அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை
தஞ்சாவூர், மார்ச் 18- தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பண்பாடு மற்றும் விளையாட்டு வார விழா ஒவ்வொரு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் நடை பெற்றது. ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் தனித் திறன்களை வளர்த்தெடுக்கும் வகையில் முதலில் பள்ளி அளவிலும், படிப்படியாக ஒன்றிய, மாவட்ட அளவிலும் திறன் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறு கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள் ஒன்றிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒன்றிய அளவில் முத லிடம் பெற்ற ஆறு மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். தஞ்சை மாவட்ட அளவில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற திறன் போட்டிகளில், கழுமங்குடா ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். கதை சொல்லுதல் போட்டியில் 4 ஆம் வகுப்பு மாண வர் மீ.முகம்மது ஹமீஸ் முதல் இடத்தையும், கண்காட்சி (அறிவியல் செயல்திட்டம்) போட்டியில் 5 ஆம் வகுப்பு மாணவி ஆ.ஷ.தனுஷ்யா 2 ஆவது இடத்தையும், பாட்டுப் போட்டியில் 5 ஆம் வகுப்பு மாணவி ச.சபீலா பானு 3 ஆம் இடத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாவட்ட அளவில் கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர் கி.ஷஜிதா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மு.கீர்த்திகா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரெ.நந்தினி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.29.39 லட்சம் பணம் பறிமுதல்
கரூர், மார்ச் 18 - கரூர் மாவட்ட பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ.29,39,150 பணம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், கரூர் மாவட்டத்தில் பறக்கும் படை யினரும், நிலையாக நின்று ஆய்வு செய்யும் குழுவின ரும் சுழற்சி முறையில் தீவிர வாகனச் சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர். அதனடிப்படையில் திங்களன்று காலை 10 மணி வரை கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராய புரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படைகள் மூலம் 13 வாகனங்களில் ரூ.23,43,010, நிலை யான கண்காணிப்பு குழுக்கள் மூலம் 2 வாகனங்களில் ரூ.5,96,500 என மொத்தம் ரூ.29,39,150 பணம் உரிய ஆவ ணம் இன்றி கொண்டு சென்றது கண்டறியப்பட்டது. இந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப் பட்டது.
தேர்தல் பாதுகாப்புப் பணி முன்னாள் படைவீரர்களுக்கு அழைப்பு
அரியலூர், மார்ச் 18 - மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு விருப்ப முள்ள முன்னாள் படை வீரர்கள் கீழ்க்காணும் அலுவல கத்தை அணுகலாம் என்று ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “நடைபெற வுள்ள மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிகளவில் ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதுக்குட்பட்ட நல்ல உடல் திறனுடைய முன்னாள் இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்த கத்தின் முதல் பக்க நகல் மற்றும் வாக்காளர் அட்டை யுடன் அரியலூர் பல்துறை வளாகத்திலுள்ள முன்னாள் படை வீரர் அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.
தேர்தல் நடத்தை விதியை மீறி நிழற்குடை அமைக்கும் பணி
அதிமுக எம்எல்ஏ பங்கேற்பு சின்னாளப்பட்டி, மார்ச் 18- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பேருந்து நிறுத்தத்தில் நிலக் கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய நிழற்குடை அமைப்பதற்கான பணிகளை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வத்தலக்குண்டு அதிமுக ஒன்றியச் செயலாளர் மோகன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத் தலைவர் கோபால், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செய லாளர் சதீஷ்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏப்ரல் 19 அன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், மார்ச் 16 அன்று முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த நிலையில், விராலிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கும் பணிகளை நிலக்கோட்டை அதிமுக சட்ட மன்ற உறுப்பினர் துவக்கி வைத்துள்ளார்.
மதுரை ரயில்நிலையத்தில் தாய் இன்றி பசியால் வாடிய 3 மாத குழந்தை பசி அமர்த்திய பெண்ணுக்கு குவியும் பாராட்டு
மதுரை, மார்ச் 17- ஞாயிறன்று அதிகாலை சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது. இந்நிலை யில் அம்பாத்துரை ரயில் நிலையத்தில் 3 மாத கைக் குழந்தையுடன் ஆண் பயணி ஒருவர் ஏறினார். அப்போது நீண்டநேரமாக குழந்தை பசியால் அழுவதை பார்த்த சக பயணிகள் குழந்தையை வைத்திருந்த நபரை சந்தேக கண் ணோட்டத்தில் பார்க்க தொடங்கினர். இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் குழந் தையுடன் அந்த நபர் இறங்கியவுடன் குழந்தை யுடன் நடந்து செல்வதை பின் தொடர்ந்து சில பய ணிகள் குழந்தை கடத்தலோ என்ற அச்சத்தில் தாக்க முயன்ற நிலையில் குழந்தையுடன் வந்த பய ணியை பிடித்து காவல் துறையினர் உதவியுடன் விசாரணை நடத்தியபோது கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குழந்தையை தூக்கிவந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரு டைய மனைவிக்கு தகவல் கொடுத்து மனைவியிடம் குழந்தையை ஒப்படைப் பதற்கான ஏற்பாடுகள் செய் யப்பட்டது. இதனிடையே நள்ளிரவு 2 மணி முதல் பச்சிளங்குழந்தை பசி யால் அழுது கொண்டிருந்த நிலையில், கோயம்புத்தூர் செல்வதற்காக மதுரை ரயில் நிலையத்திற்கு வருகை தந்த பெண் ஒருவர் கோயம்புத்தூர் செல்லும் ரயில் புறப்பட 15 நிமிடங்களே இருந்த நிலை யில் குழந்தையின் அழு கையை உணர்ந்து தாயுள் ளத்தோடு வந்து குழந் தைக்கு தாய்ப்பால் ஊட்டி குழந்தையின் பசியாற்றினார். பசியோடு தவித்த பச்சிளங் குழந்தைக்கு கரு ணையோடு தாய்ப்பால் ஊட்டிய அந்த பெண் பய ணியை பாராட்டும் விதமாக இனிப்புகளை கொடுத்து ரயில் பயணிகளும், ரயில்வே காவல்துறையினரும் பா ராட்டி வழி அனுப்பி வைத்த னர்.