தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 34 ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை சேகரிக்கும் வண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச்செல்வன், ஊராட்சி மன்றத் தலைவரிடம் வண்டியை வழங்கினார்.