தஞ்சாவூர், ஜூன் 15-
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வீ. தெய்வசிகாமணி (52). கரும்பு வெட்டும் தொழிலாளி. இவர் 2019-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் அருகே தங்கப்ப உடை யான்பட்டியில் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அப்போது, தன்னுடன் பணியாற்றிய பெண்ணின் 12 வயது மகளுக்கு அடிக்கடி திண்பண்டங்கள் வாங்கிக் கொடுத்து பழகி வந்தார்.
இந்நிலையில், வயிற்றுவலியால் அவதிப்பட்ட மகளை, தாய் 2020-ஆம் ஆண்டு அழைத்துக் கொண்டு அரி யலூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் மகள் கர்ப்பமாக இருப் பது தெரிய வந்தது. பின்னர், மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து, புதுச்சேரியில் உள்ள காவல் நிலை யத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலை யத்துக்கு வழக்கை மாற்றினர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி கர்ப்பமானதற்கு காரணமான தெய்வசிகாமணி கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதி பதி ஜி.சுந்தர்ராஜன் விசாரித்து, தெய்வசிகாமணிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராத மும் விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தார். மேலும், பாதிக் கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் வழங்குமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார்.