districts

img

புதிய தொழில் தொடங்க 20,315 பேருக்கு அனுமதி

தஞ்சாவூர், ஜன.1-  தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 20,315 பேருக்கு புதிய தொழில் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில், தொழில் வளர்ச்சியிலும், பொருளாதாரத்திலும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. சமீபத்தில், நிதி  ஆயோக் வெளியிட்ட ஏற்றுமதி தயார் நிலை குறியீடு தர வரிசைகளின்படி, 80.89 புள்ளிகளுடன் அகில இந்திய அள வில் முதல் இடத்தை பெற்றுள்ள தமிழ் நாடு, மின்னணுவியல் ஏற்றுமதியிலும் முதல் இடத்தில் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் மற்றும் பணியா ளர்களைக் கொண்ட மாநிலங்களில் முத லிடத்திலும், குறு, சிறு மற்றும் நடுத்த ரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக் கையில் அகில இந்திய அளவில், இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியாவில் தொழில் புரிவதற்கு சிறந்த மாநிலங்களுள் ஒன்றாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.  அவ்வழியில் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையமும் பங்களிக்கிறது. மாவட்ட தொழில் மையத்தின் வாயி லாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெ றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் வாயிலாக, இயந்தி ரத் தளவாடங்கள் மீதான முதலீட்டு மானியத்தை 15 சதவீதத்திலிருந்து 25  சதவீதமாக உயர்த்தியதன் அடிப்படை யில் மாவட்டத்தில், கடந்த 1.5.2021 முதல் 31.11.2023 வரை குறு மற்றும் சிறு  தொழில் நிறுவனங்களுக்கு மூலதன மானியமாக ரூ.1044.85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்களை ஊக்கு விக்கும் வகையில் மின் மானியமாக ரூ.  44.48 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. படித்த வேலைவாய்ப்பற்ற இளை ஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்தின்கீழ், 270 படித்த இளை ஞர்களுக்கு தொழில் தொடங்க ரூ.1076. 96 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.268.99 லட்சம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை தொழில் முனை வோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 67 பயனாளி களுக்கு ரூ.4579.72 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ. 455.28 லட்சம் மானி யத்துடன் கடன் உதவி வழங்கப்பட்டுள் ளது. அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் தற்போது வரை 138 விண்ணப்பங்கள் ரூ.1064.57 லட்ச திட்ட மதிப்பீட்டில் வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு, 52 பேருக்கு ரூ.230.56 லட்சம் கடன் ஒப்பளிப்பு பெறப் பட்டு, 3 பயனாளிகளுக்கு ரூ.15.20 லட்சம் மானியம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம்  சார்பில் 19,259 பொதுப் பிரிவின ருக்கும், 1,056 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் புதிய  தொழில் தொடங்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. மேலும் புதிதாக தொழில்  தொடங்க விரும்புபவர்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்து டன் கடனுதவி பெற்று பயன் பெற லாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

பயனாளிகள் நன்றி 

தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம்  மூலம் சுயவேலை வாய்ப்பு உரு வாக்கும் திட்டத்தின்கீழ், கடனுதவி பெற்று, மரம் இழைப்பு பட்டறை தொழில் துவங்கிய தஞ்சாவூர், கீழவா சல் தொழில் முனைவோர் மோகன் மற்றும் ரூ.1 கோடியே 21 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று கயிறு தயாரித்தல் மற்றும் பித் ஒர்க்ஸ் தொழில் நடத்தி  வரும் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மோட்ச சுந்தரி ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வா கத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். 

தொகுப்பு
ரெ.மதியழகன், 
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், 
தஞ்சாவூர்.