districts

img

10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூர், ஏப்.28-

   கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தலைமையில் வெள்ளி யன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

   கூட்டத்தில், மார்ச் 31 அன்று நடைபெற்ற விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு நேரடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் பதில் தெரிவித்தார்.

  மேலும், விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை  பெற்று 10 பயனாளிகளுக்கு ரூ.2,50,657 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங் கினார்.

   நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ம. கண்ணன், கவிதா(நிலம் எடுப்பு), வேளாண் இணை இயக்குநர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் கந்தராசா, சமூக பாதுகாப்பு திட்ட தனித் துறை ஆட்சியர் சைபுதீன், கோட்டாட்சியர்கள் ரூபினா (கரூர்), புஷ்பாதேவி(குளித்தலை), மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.