districts

img

‘தூண்டில்’ நூல் வெளியீட்டு விழா

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு பொது நூலக வாசகர் வட்டம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர் கடலார் கே. வேலாயுதம் எழுதிய ‘தூண்டில்’ என்ற நூலினை மீன்வளத்துறை இணை இயக்குநர் ந. சந்திரா வெளியிட சென்னை மாவட்ட நூலக அலுவலர் மு.கவிதா பெற்றுக்கொண்டார். இதில் மெட்ராஸ் நூலக சங்க தலைவர் நித்யானந்தம், வழக்கறிஞர் பானுமதி பாஸ்கரன்,  புலவர் பா. வீரமணி, மீனவர் சங்க நிர்வாகிகள்  உச்சநீதிமன்ற வழக்கறிஞர் எல். பிரவீன் குமார், பாவலர் மு.ராமச்சந்திரன்,   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்  ரவிதாசன்,  நூலகர் த. கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.