திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- ஒன்றிய-மாநில அரசு, பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் தமிழ் மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பில் “நாடும் நாமும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் திங்களன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாசா மஹாலில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாவட்டத் தலைவர் சிராஜுதீன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் மதிவாணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் எம்.வி.செந்தமிழ் செல்வன் துவக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில உதவி தலைவர் சண்முகம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற மின் ஊழியர் நல அமைப்பு மாநில துணைத் தலைவர் பஷீர், அனைத்திந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாவட்டத் தலைவர் சேகர், டி.ஆர்.பி.யு. கோட்டத் தலைவர் வெங்கடேசன், என்.சி. சி.பி.ஏ மாவட்டச் செயலாளர் கோபால்சாமி, அகில இந்திய பிஎஸ்என்எல் - டி.ஓ.டி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஜான் பாஷா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாணிக்கத் தாய் ஆகியோர் கருத்துரை ஆற்றினர். தமுஎகச மாநில துணைத் தலைவர் நந்தலாலா நிறைவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைச் செயலாளர் சின்னச்சாமி நன்றி கூறினார்.