districts

img

‘அறிவோம் மார்க்சியம்’ 3 ஆம் ஆண்டு பயிற்சி வகுப்பு

பெரம்பலூர், ஜன.23 - பெரம்பலூர் மாவட்டம் தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில் ‘அறிவோம் மார்க்சியம்’ மூன்றாம் ஆண்டு தொடர்  பயிற்சி வகுப்பு ஜன.20 அன்று லட்சுமி  மருத்துவமனை கூட்ட அரங்கில் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லத்துரை தலைமை வகித்தார். பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.கருணாநிதி வரவேற்றார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மருத்துவர் கருணாகரன், கலையரசி, ரெங்கநாதன், ராஜேந்திரன், வேப்பந் தட்டை ஒன்றிய செயலாளர் சக்தி வேல், பெரம்பலூர் நகரச் செயலாளர் (பொ) கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பின ரும் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாள ருமான ஜெயசீலன் கருத்துரை ஆற்றி னார். மாவட்ட கல்வி குழு கன்வீனர் கவிஞர் எட்வின், சத்துணவு ஊழியர் கள் சங்க மாவட்டச் செயலாளர் கொளஞ்சி, மக்களை தேடி மருத்துவம் ஊழியர் சங்கம் மாவட்டச் செயலாளர்  செல்வி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக் குழு மாவட்டச் செயலாளர் ஜேசு தாசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் ராமகிருஷ்ணன், விவசாயி கள் சங்க மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, வாலிபர் சங்க  மாநில இளம் பெண்கள் உப குழு உறுப்பினர் பிரியா, தமிழ்நாடு அறிவி யல் இயக்க மாவட்டச் செயலாளர் இராமர், தீக்கதிர் வாசகர்கள் கலந்து கொண்டனர். குன்னம் வட்டச் செயலா ளர் செல்லமுத்து நன்றி கூறினார்.