districts

img

இந்தியைத் திணிக்கும் மோடி தமிழைப் புகழ்வது கட்டுக்கதை!திண்டுக்கல்லில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

திண்டுக்கல், ஏப்.13- எதிர்க்கட்சித் தலைவர்களை வளைத்துப் போட அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகளை பயன் படுத்தி குதிரை பேரம் நடத்துகிறது பாஜக என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தா ராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார்.

திண்டுக்கல் தொகுதியில் திமுக  தலைமையிலான இந்தியா கூட்டணி யின் சார்பாக போட்டியிடும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து வெள்ளி யன்று மாநகராட்சி அருகே நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு ஆற்றிய உரையின் பகுதிகள் வருமாறு: 

இந்தியாவில் இந்தத் தேர்தல் என்பது யுத்தம் போல நடைபெற்று வரு கிறது. மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் பெரிதும் எதிர்பார்ப்பது தமிழ கத்தைத் தான். ஏனென்றால் கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உட்பட அதன் கூட்டணி கட்சிகளுக்கு தமிழ்நாட்டில்  முட்டை தான் கிடைத்தது. அதே போல் இந்த தேர்தலிலும் பாஜக உட்பட அனைத்து எதிர் கட்சிகளுக்கும் முட்டை தான் கிடைக்க வேண்டும் என  எதிர்பார்க்கின்றனர். நாடு தற்பொழுது மிகவும் அபாயகரமான கட்டத்தில் உள்ளது. அதனை மீட்டெடுக்கக்கூடிய கடமை நமக்கு உள்ளது. 

ஜனநாயகத் தூண்கள் மீது தாக்குதல் 
கடந்த 10 ஆண்டுகளில் நாம் போராடிப் பெற்ற உரிமைகளை மோடி  அரசு காலில் போட்டு மிதித்து நசுக்கி யுள்ளது. மாநில உரிமைகள்,  சமூக நீதி, மதச்சார்பற்ற ஜனநாயகம், பொரு ளாதார இறையாண்மை ஆகிய நான்கு தூண்களின் மீது பாரதிய ஜனதா கட்சி பல்வேறு தாக்குதல்களை தொடுத்துள் ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் இயங்குகின்ற சில முக்கியமான நிறுவனங்கள் உண்டு. அவைகளும் படிப்படியாக சிதைக்கப்பட்டு வரு கின்றன. எதிர்க்கட்சிகளை வேட்டை யாட மத்திய அரசின் நிறுவனங்கள், நாடாளுமன்ற மரபுகள், நீதித் துறை, தேர்தல் ஆணையம், மத்திய முகமைகள் எனச் சொல்லக்கூடிய அம லாக்கத்துறை, வருமானவரித்துறை,   சிபிஐ உட்பட அனைத்துத்துறை களும் அரசியல் கருவிகளாக பயன் படுத்தப்பட்டு வருகின்றன.

எதிர்த்துப் பேசும் தலைவர்களுக்கு சிறை
மோடியை எதிர்த்துப் பேசுகின்ற எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மீது  ரெய்டு, கைது போன்ற பல சம்பவங் கள் நடைபெறும். அதே நேரம் சம்பந்தப் பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால் குற்றவாளிகள் எல்லாம்  ‘சுத்தமானவர்களாக’ மாறிவிடு வார்கள். சம்பந்தப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்து விட்டால்,   அவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வழக்குகள் கிடப்பில் போடப்படுகின்றன. எதிர்க் கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும். அதில் இருக்கக்கூடிய தலைவர்களை பாஜகவில் சேர்த்து தங்களை வலுப் படுத்த வேண்டும் என்ற மோசமான நோக்கத்தோடு மோடி இந்த வேலை யை செய்து வருகிறார். 

தேர்தல் பத்திரம் மூலம்  ரூ.10 ஆயிரம் கோடி 
தேர்தல் பத்திரங்கள் மூலமாக வரக்கூடிய பணம் எங்கே இருந்து வரு கிறது; அந்த பணம் எந்த வகையில் வந்தது  என்பதை பற்றி எல்லாம் பாஜக கவலைப்படாமல் வாங்கிக் குவித் துள்ளது.  கிட்டத்தட்ட 10, 000 கோடி  ரூபாய் பாஜகவுக்கு நன்கொடையாகச் சென்றுள்ளது. இந்தியாவின் வளங்கள்  அனைத்தும் மோடி அரசால் சுரண்டப் படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்கப்பட்டு வரு கிறது. இந்தியா சகலவளங்களு டன் பாதுகாக்கப்படவேண்டும் என் றால் பத்துஆண்டு காலம் ஆட்சி செய்த மோடி அரசை  வீட்டுக்கு அனுப்ப வேண்டியது நமது கடமையாகும்.

மோடியிடம் கேட்க வேண்டிய கேள்வி 
பிரதமர் மோடி தேர்தலை முன்னிட்டு  7ஆவது முறையாக தமிழகம் வந்துள்  ளார்.  தமிழைப் புகழ்கிறார்.  தமிழ கத்தின் இலக்கியம்,  கலாச்சாரம் பற்றி  பேசும் மோடியிடம், அவர்களின் மூல  அமைப்பான ஆர்எஸ்எஸ்-ஐ கைவிட்டு விட்டீர்களா என நாம் கேட்க வேண்டும். இந்துத்துவத்தை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர்.இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக் கிறது பாஜக. 8ஆவது அட்டவணை யில் உள்ள தமிழ்  அனைத்து மொழி களுக்கும்  சமமான அந்தஸ்து வேண்டும் என கேட்டால் மோடி  மறுக்கிறார், பின் வாங்குகிறார். 

பன்முகத்தன்மை  கொண்டது இந்தியா
பன்முகத் தன்மை தான் இந்தி யாவின் குணாம்சம். இதனை மறுக்கிற மோடி, தேர்தல் நேரத்தில் தமிழ் மொழியையும்,  இலக்கியத்தையும் பேசுவது கட்டுக்கதையாக இருக் கிறது. 

அமலாக்கத்துறை,  வரு மான வரித்துறையைப்  பயன்படுத்தி குதிரை பேரத்தை பாஜக நடத்து கின்றது. இதற்கு மூலவராக விளங்கு வது மோடி தான். 

மக்கள் விரோதச் சட்டங்களை எதிர்த்து நாங்கள் போராடி  உள்ளோம். சிறுபான்மை மக்களை தாக்குவது, பாகு படுத்துவது என்ற நோக்கோடு சட்டத் திருத்தங்களை பாஜக ஆட்சியாளர்கள் கொண்டு வந்துள்ளனர். 

இந்தப் பின்னணியில், இந்தியா வின் பன்முகத் தன்மை,  ஜனநாயகம்,  அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்துக்கு அரிவாள்,  சுத்தியல்,  நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக் கூட்டத்திற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். துணை மேயர் எஸ். ராஜப்பா வர வேற்றார். பழனி எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமார், திண்டுக்கல் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திமுக ஒன்றியச் செய லாளர்கள் நெடுஞ்செழியன், வெள்ளி மலை, சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சி தானந்தம், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி. நகரச்செயலாளர் அரபு முகமது. ஒன்றியச் செயலாளர் சரத்குமார், காங்கிரஸ் மாநகரத் தலைவர் மணிகண்டன், மதிமுக மாவட்டச் செயலாளர் என்.செல்வ ராகவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் மணி கண்டன், விசிக மாநில தலைவர் களுள் ஒருவரான வில்லவன் கோதை, ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவர் கு.ஜக்கையன்,  மக்கள் நீதி மையம் சார்பாக சீனிவாச பாபு, மாநகரத்தலைவர் மைதீன்பாவா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கிழக்கு மாவட்டத்தலைவர் அம்ஜா, மனித நேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டச்செயலாளர் சேக்பரீத், திராவிடர்கழக மண்டலச்செயலாளர் வீரபாண்டியன். மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த முனிராசன், காஞ்சித்துறை, தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக அறிவரசன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள்  பங்கேற்றனர். ஜானகிராமன் நன்றி கூறினார்.

சீத்தாராம் யெச்சூரியின் ஆங்கில உரையை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தமிழில் மொழி பெயர்த்தார்.

வாசகர்கள், முகவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தீக்கதிர் நாளிதழுடன் வழக்கம் போல் ஞாயிறன்று (14.4.2024) வெளிவர வேண்டிய வண்ணக்கதிர் மக்களவைத் தேர்தல் சிறப்பிதழ் - திங்களன்று (15.4.2024) வெளிவரும். 

- ஆசிரியர்