திண்டுக்கல், பிப்.19- புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய பென்சன் திட்டம் தொடர வேண் டும். ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி அரசு ஊழி யர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ சார்பாக போராட்ட ஆயத்த மாநாடு திண்டுக் கல், விருதுநகர், சிவகங்கை யில் ஞாயிறன்று நடைபெற்றது. திண்டுக்கல் பிச்சாண்டி மண்ட பத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.முபாரக்அலி, ஜேம்ஸ் அந் தோணிதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜான்பீட்டர் வர வேற்றார். ஏ. ஜோசப்சேவியர், ராஜாகிளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கி ணைப்பாளர் காந்தராஜ், உயர் மட்டக்குழு உறுப்பினர் மங்க ளப்பாண்டியன், குன்வர் ஜோஸ்வா ஆகியோர் உரையாற்றி னர். ஜெசி நன்றி கூறினார்.
விருதுநகர்
விருதுநகரில் நடைபெற்ற இம்மாநாட்டில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப் பையா, ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெற்ற மாநாட்டில் மாவட்ட ஒருங்கிணைப பாளர்கள் முத்துப்பாண்டியன், செல்வக்குமார், முத்துச்சாமி, நாகேந்திரன், ஜோசப் சேவியர், முத்துராமன், தவமணி செல்வம், ரவிச்சந்திரன் ஆகியோர் பங் கேற்றுப் பேசினர்.
தேனி
ஜாக்டோ ஜியோ சார்பில் தேனி யில் வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் தாஜுதீன் தலைமை வகித்தார். ஜாக்டோ ஜியோ ஒருங்கி ணைப்பாளரும் ,அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாள ருமான ஆ. செல்வம் சிறப்புரை யாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் கௌதம் அசோக் குமார், சீனி வாசன், பெரியசாமி, பி.பேய தேவன், சண்முகவேல் ஆகியோர் விளக்கப் பேசினர். முன்னதாக அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவரும் சாலை பணி யாளர்கள் சங்க மாவட்ட தலைவ ருமான, தோழர் முத்தையா மறை விற்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு மற்றும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய அரசு ஊழி யர் சங்க மாநில பொதுச் செயலா ளர் ஆ.செல்வம், பங்களிப்பு ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்ன படி முதல்வர் அமல்படுத்த வேண் டும். ஊதிய முரண்பாடு அக விலைப்படி நிலுவைத் தொகை, ஈட்டிய விடுப்பு சரண் உள்ளிட்ட சலுகைகளை திரும்ப வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மதிப்பூ தியத்தை அறவே ஒழித்து அனை வருக்கும் காலமுறை ஊதியம் வழங்குவது பற்றி மாநிலஅரசு தீர்வு காண வேண்டும்.இந்த கோரிக்கை களை உடனே நிறைவேற்ற வலி யுறுத்தி மார்ச் 5ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட் டம் நடத்த ஜாக்டோ ஜியோ மாநில அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். நிதி காப்பாளர் செல்லத்துரை நன்றி கூறினார்.