திண்டுக்கல், ஏப்.8- திமுக தலைமையிலான இந் தியா கூட்டணியின் சார்பில் திண் டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்திற்கு சுத்தியல் அரி வாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக் குகள் கேட்டு ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய இடங்களில் ஞாயிறன்று மாலை தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன.
இக்கூட்டங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிர காஷ் காரத் பங்கேற்று உரையாற்றி னார். அப்போது, “பாஜகவின் ‘பி’ டீம் தான் அஇஅதிமுக என கடு மையாக சாடிய பிரகாஷ் காரத், கடந்த முறை அஇஅதிமுக ஒரு தொகுதியை வென்று, பாஜக கொண்டு வந்த குடியுரிமை திருத் தச் சட்டம் உட்பட இந்தியர்களுக்கு எதிரான அனைத்து சட்டங்களை யும் ஆதரித்தது; எனவே பாஜக வோடு சேர்த்து அஇஅதிமுகவை யும், பாமகவையும் வீழ்த்த வேண் டும்” என்று கேட்டுக் கொண்டார்.
பிரச்சாரத்தில் அவர் மேலும் பேசியதாவது;
இந்தியா கூட்டணியை அரசி யல் ரீதியாக எதிர் கொள்ளத் திராணி யற்ற பாஜக அரசு, அடக்கு முறை யை ஏவி விட்டுள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், தில்லி முதல் வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க் கண்ட் மாநிலத்தின் முதல்வரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி யின் தலைவருமான ஹேமந்த் சோரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட இந்த தலைவர்களை அரசமைப்பு சட் டத்தை மீறியும் அடிப்படை உரிமை களை நசுக்கியும் அராஜகமாக கைது செய்துள்ளது மோடி அரசு.
பாஜகவினரை விரட்டியடிக்கும் விவசாயிகள்
கடந்த சில வாரங்களாகவே தேர்தல் பிரச்சாரங்கள் நாடு முழு வதும் தீவிரமாக நடந்து வருகிறது. அதில் பல செய்திகளை நம்மால் கேட்க முடிகிறது. பஞ்சாப்பில் பாஜக வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க சென்ற போது, பல கிரா மங்களில் விவசாயிகள் ஒன்று சேர்ந்து பாஜகவினரை ஊருக்குள் விடாமல் தடுத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி கிராம மக் கள், குறிப்பாக விவசாயிகள் பாஜக வினரை நோக்கி, ‘‘நீங்கள் (பாஜக வினர்) விவசாயத்தையும், எங்கள் விவசாய நிலங்களையும் தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்க முயற்சி செய்தவர்கள். உங்கள் கட்சி அதை செய்தது. அதற்காக தான் பாஜக மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது’’ என கேள்விக் கணை களைத் தொடுத்ததோடு மட்டு மல்லாமல் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர்.
பாஜகவின் இத்தகைய துரோ கத்திற்கு எதிராக ஓராண்டு கால மாக விவசாயிகள் போராடி வந் ததை அனைவரும் பார்த்தோம். அவர்கள் எதற்காக போராடினார் கள்? சட்டப்பூர்வமான குறைந்த பட்ச ஆதார விலை கேட்டு போராடி னார்கள். அதை பாஜக இன்று வரை தரவில்லை. விவசாயிகளை வஞ் சிப்பதை மட்டும் தான் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்து வரு கிறது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கை
பாஜக கடந்த 2014 நாடாளு மன்றத் தேர்தலின் போது, ஆண் டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு களை இளைஞர்களுக்கு உரு வாக்கித் தருவதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள் ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பு அற்று இருப்பவர்கள் 83 சதவிகி தம் பேர் இளைஞர்கள். அதில், 67 சதவிகித இளைஞர்கள் மேல் நிலைக் கல்வி, இளங்கலை, முது கலை பட்டம் பெற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
அதே வேளையில், ஒன்றிய அர சின் பல துறைகளில் லட்சக்கணக் கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கும் பொதுத் துறை நிறுவனங்களையும் கார்ப்ப ரேட்களுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இதே காலகட்டத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழி யர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது. வேலைவாய்ப்புகள் உரு வாக்கப்பட்டுள்ளன என பாஜக பேசு வது மிகப்பெரிய பொய்யாகும்.
சிறு, குறு நிறுவனங்களை அழித்த மோடி
இளைஞர்களுக்கு அதிக வேலைகளை தரும் பகுதியாக இருப்பது சிறு, குறு நிறுவனங்களே. ஆனால், மோடி அரசு அந்தத் துறை களின் வளர்ச்சியில் எந்த கவன மும் செலுத்தாமல் சிறு, குறு நிறு வனங்களை முடக்கி விட்டது. இத னால் சிறு, குறு துறை சார்ந்த அனைத்து பகுதி மக்களும் கடு மையாக வாழ்வாதார நெருக்கடி களை சந்தித்துள்ளனர். ஆனால் இதே காலகட்டத்தில் அம்பானியும், அதானியும் பல சலுகைகளையும் திட்டங்களையும் பாஜக அரசிடம் இருந்து பெற்றுள்ளனர்.
‘இந்தியா’ கூட்டணி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்
‘இந்தியா’ கூட்டணியில் உள்ள கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கு வது குறித்து பிரதானமாக பேசி யுள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட் டணி ஆட்சியில் இருந்த போது இடதுசாரிகளால் ஊரக (ஆண் டுக்கு 100 நாள்) வேலையுறுதித் திட்டம் உருவாக்கப்பட்டது. இது கிராமப்புற வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டது.
அதேபோல ‘இந்தியா’ கூட் டணி வென்ற பிறகு நகர்ப்புற வேலை உறுதித்திட்டம் அமலுக்கு வரும். கவுரவமான ஊதியத்து டன் கூடிய வேலைகள் உருவாக்கப் படும் என ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் உறுதி கொடுத்துள்ளன.
பாஜக மிகப்பெரும் ஊழல் கட்சி
‘இந்தியா’ கூட்டணிக் கட்சி களைப் பார்த்து ஊழல் கட்சிகள் என்று பாஜக கூறி வருகிறது. ஆனால் உண்மையில் பாஜகதான் ‘உலகமகா ஊழல் கட்சி’ என்பது தேர்தல் பத்திரங்கள் விவகா ரத்தில் வெளிச்சத்திற்கு வந்துள் ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட்களிடம் பெருமளவு லஞ்சம் வாங்கி ஊழல் செய்துள் ளது. அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி மிரட்டி பல கார்ப்ப ரேட்களிடம் இருந்து பணம் பறித் துள்ளது.
உச்சநீதிமன்றம் தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் வெளியிட வேண் டும் என்று ஸ்டேட் வங்கிக்கு உத்தர விட்ட பிறகு ஒவ்வொரு நாளும் பாஜக செய்த பல ஊழல்கள் வெளி வருகின்றன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு பணத்தை கொடுத்து அதற்கு கைமாறாக பல திட்டங் களை, அரசு காண்ட்ராக்ட்களை அந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன என்பதும் அம்பலமாகி உள்ளது.
கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் பாஜக
மாநிலங்களை நெருக்கடிக்கு தள்ளி, இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி என்ற கட்டமைப்பையும் பாஜக சிதைத்து வருகிறது. தமிழ் நாடு, கேரளம் போன்ற மாநிலங்க ளின் நிதி ஆதாரத்தை முடக்கி யுள்ளது; எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நசுக்கிக் கொண்டு உள்ளது. கேரளத்தின் நிதியாதா ரத்தை பாஜக முடக்கியதற்கு எதி ராக கேரளம் வழக்கு தொடுத்தது. அதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ஆதரவை தெரி வித்தார். அதை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கிறோம். தற் போது தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணம் ஏன் தரவில்லை எனக் கேட்டு, பாஜக அரசுக்கு எதிராக வழக்கு போட்டுள்ளது. அதனைக் கேரளம் வரவேற்று ஆதரவு தந் துள்ளது. தமிழக முதல்வரின் இத்தகைய வலுவான போராட்டத் திற்கு, மார்க்சிஸ்ட் கட்சி தனது உறுதியான ஆதரவைத் தெரி வித்துக் கொள்கிறது.
மோடி அரசு ஏவி விட்டுள்ள ஆளுநர்கள் பிரிட்டிஷ் காலத்து வைஸ்ராய்களைப் போல தன்னிச் சையாக செயல்படுகின்றனர். மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகள் சட்டமன்றத்தில் புதிய சட்டங்களையோ தீர்மானங்களை யோ நிறைவேற்றும் போது, அதற்கு கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கா மல் காலம் தாழ்த்தி மாநில மக் களை வஞ்சித்து வருகின்றனர்.
பாஜகவை தோற்கடித்து ஆபத்தை முறியடிப்போம்!
கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் தமிழ்நாடு, கேரளத்தில் பாஜக ஒரு இடம் கூட வெல்லமுடிய வில்லை. அதேபோல இந்த தேர்த லிலும் பாஜகவை நாம் துடைத் தெறிய வேண்டும்.
திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத் திற்கு சுத்தியல் அரிவாள் நட்சத்தி ரம் சின்னத்தில் வாக்களித்து அவ ரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரகாஷ் காரத் உரையை ‘தீக்க திர்’ நாளிதழின் ஆசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன் மொழியாக்கம் செய்தார்.