districts

img

கோயில் கருவறைகளில் சமத்துவம் நிலவ வேண்டும்

திண்டுக்கல், ஆக.24- தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்டம், பழ னியில் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன்  மாநாடு’ சனிக்கிழமையன்று துவங்கியது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு சொந்தமான பழனி ஆண்டவர் கல்லூரியில் ஆகஸ்ட் 24, 25 என  இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்  டின் துவக்க நிகழ்ச்சியாக அமைச்சர் பி.கே.  சேகர்பாபு மற்றும் பல்வேறு மடாதிபதிகள் குத்து விளக்கு ஏற்றினர்.

100 அடி உயர மரத்தில், ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள் மாநாட்டுக் கொடியேற்றினார். கண்காட்சியை அமைச்சர்கள் ஐ. பெரி யசாமி, அர. சக்கரபாணி ஆகியோர் ரிப்பன்  வெட்டி திறந்து வைத்தனர். இந்த சமய  அறநிலையங்கள் துறை அரசு முதன்மை  செயலாளர் பி. சந்திரமோகன் வரவேற்றார். திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். மாநாடு நடைபெறும் அருணகிரிநாதர் அரங்கில் ஆதீனங்கள், அமைச்சர்கள் சிறப்பு உரை ஆற்றினர்.

மேலும் மாநாட்டு  மலரும் வெளியிடப்பட்டது. இம்மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து சுமார் 1,003 ஆய்வுக்  கட்டுரைகள் வந்துள்ளன. திருவாடுதுறை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீ னம், குருமகா சந்நிதானம், சிரவை ஆதீ னம், மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 15 ஆதீனங்கள் மற்றும் 30 ஆன் மீக சொற்பொழிவாளர்கள், 30-க்கும் மேற்  பட்ட வெளிநாட்டு பிரமுகர்களும், 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்களும் கலந்து கொண்ட இந்த மாநாட்டை, தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி முறையில் துவக்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர் பேசிய தாவது: நீதிக்கட்சி ஆட்சியில் தான் இந்து சமய  அறநிலையத்துறை பாதுகாப்புச் சட்டம்  நிறைவேற்றப்பட்டது. கடந்த 3 ஆண்டில்  மட்டும் 1000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. பழனி, இடும்பன் மலை உள்ளிட்ட பகு திகளில் ரோப் கார் சேவை அமைக்கப் பட்டுள்ளது.

அறுபடை வீடுகளுக்கு இது வரை 813 பக்தர்கள் அரசு சார்பில் அழைத்  துச் செல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்து 355 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 8 ஆயி ரத்து 436 கோவில்களில் திருப்பணிகள் நடை பெற்று வருகிறது. 756 திருக்கோவில்களில் நாள்தோறும் அன்னதானம் திட்டத்தில் நாளொன்றுக்கு 82 ஆயிரம் பேர் உணவருந்துகின்றனர்.

4 ஆயிரத்து 181 ஏக்கர் நிலம் மீண்டும் கோவில் பெயரில் பட்டா மாற்றம் செய் யப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட பல்வேறு  திட்டங்கள் நூல்களாக வெளியிடப்பட் டுள்ளன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்  பிக்கை இருக்கும்.

அதில் உயர்வு தாழ்வு  இல்லை. திருக்கோயில்களில் கரு வறைக்குள் மனிதர்களுக்கு இடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவ  வேண்டும். அனைத்து ஆலய வழிபாடுகளி லும் தமிழ் முதன்மை பெற வேண்டும். அன்  பால் உயிர்கள் ஒன்றாக வேண்டும்.. அறத்  தால் உலகம் நன்றாக வேண்டும்.” இவ்வாறு முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.