districts

img

பேய் பிடித்ததாகக் கூறி இளம்பெண்ணைத் தாக்கிய பூசாரி கண்டுகொள்ளாத வேடசந்தூர் போலீசார்

திண்டுக்கல், டிச.4- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புறவழிச்சாலையில் உள்ள கிராமம் காக்காதோப்பு. இந்த கிராமத்தில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு ஒரு தாய் தன் மகளை அழைத்து வந்துள்ளார்.  அந்த இளம்  பெண் ணிற்கு பேய் பிடித்ததாகக் கூறிய அக்கோவிலின் பூசாரி அந்த பெண்ணை கருங்கா லிக்கட்டையைக் கொண்டு கடுமையாக தாக்கினார்  என்னை காப்பாற்றுங்கள் என்று அந்த இளம்பெண் கதறி இருக்கிறார்.

அந்த பூசாரி பேயைத்தானே அடிக் கிறார். அந்த பெண்ணை அடிக்கவில்லையே என்று மூடநம்பிக்கை நிறைந்த மக்கள் வேடிக்கை பார்த்தார் கள். அப்போது அங்கு வந்த ஒரு பெரியவர் மட்டும் பூசாரி யின் கையைப் பிடித்து அவ ரது கன்னத்தில் இரண்டு முறை அடித்தார். ஆனால் அந்த பூசாரி அவரிடம் இருந்து திமிரிக் கொண்டு அந்த இளம்பெண்ணை தாக்கினார். மேலும் அந்த பெண்ணின் முடியைப் பிடித்து இழுத்து மண்டியிட வைத்துள்ளார்.

அந்த பெண்ணின் தாயையும் பக் கத்தில் வரக்கூடாது என்று கூறியுள்ளார்.  இந்த சம்பவம் வலைத்தளங்களில் வைர லாகி வருகிறது. இளம் பெண்ணிற்கு பேய் பிடித்தது என்று கூறி பூசாரி தாக்கி யதை அனைத்து தரப்பின ரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் வேடசந்தூர் போலீசார் இது வரை ஒரு வழக்கு கூட பதிய வில்லை. இந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் மட்டு மல்ல சமூக வலைதளத்தில் வைரலாகி அனைவரும் இச் சம்பவத்தை கண்டித்துள் ளனர்.  

பொதுவாக பேய்  பிடிப்பபது தொடர்பாக மருத்துவ உலகம் இதனை  ஒரு மனநோயாகவே பார்க்கிறது. இயல்புக்கு மாறாக செயல்படுவது, அபரிமிதமாக நடந்து கொள்வது, நினைவுகளை இழந்தவாறு காணப்படுவது போன்ற நடவடிக்கைகளை மருத்துவத்துறையில் ஆளுமை சிதைவு என்று சொல்லப்படுகிறது.  பேய் பிடித்திருக்கிறது என்று கூறி பெண்களை கோ வில் பூசாரிகள் அடிப்பது, தாக்குவது சட்டப்படி குற்ற மாகும். ஆனால் போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்