districts

img

பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? மகளிர் காங்கிரஸ் தலைவர் கேள்வி

தருமபுரி, ஜூன் 11- பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்படுமா? என்று பிரதமர் மோடிக்கு மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசினா சையத் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் சார்பில், “பாஜக மன்னர் ஆட்சியை தகர்த்தெறிந்து, ஜனநாயக கொண் டாட்டம்” தருமபுரி மாவட்டம், அதிய மான் அரண்மனையில் நடைபெற்றது. மகளிர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசினா சையத் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் டி.காளியம்மாள், பொதுச்செ யலாளர் பி.ரேவதி பாலமுருகன், மாநில நிர்வாகி கார்த்திஸ்வரி, மாவட்டச் செய லாளர் எம்.விஜயா, பொருளாளர் பூங் கொடி, வட்டாரத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 இதன்பின் ஹசீனா சையத் செய்தி யாளர்களிடம் பேசுகையில், மாண்பே இல்லாத பிரதமர் நாட்டின் அரசியல் சட்டத்தை தலைவணங்கினாரா? அல்லது தலையில் அடித்துக் கொண்டாரா? என்று தெரியவில்லை. ராகுல்காந்தி இந்திய நாட்டின் சட்டத் தை கையில் பிடித்தாரோ, அப்போதே மோடியின் தலையெழுத்து மாறி விட்டது. பாஜகவின் சர்வதிகாரம் வீழ்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு, தமிழன் என்று சொல்வதில் ஒரு பெருமை உண்டு.

தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை விரட்டியடித்தற்கு, நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்லாமியர் முன்பு காங்கிரஸ் ‘குஜ்ரா நடனம்’ ஆடுகிறது என மோடி குறிப்பிட்டு பேசியுள்ளார். குஜ்ரா என்றால் தாசிகள் நடனம் என்று பொருள். தேர்தல் முடிந்த பிறகு மோடி, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ்குமார் முன்பும் தான் நடனமாடிக் கொண்டி ருக்கிறார். நாட்டின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் 70 கோடி பெண்கள் உள்ளோம். நாட்டின் எல்லா தளங்க ளிலும் பெண்கள் உள்ளனர். 5 ஆண்டு காலம் முழுவதும் உங்கள் ஆட்சி நீடிக்குமா? பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் அமல்படுத்துவீர்களா? என்று ஹசீனா சையத் கேள்வி எழுப்பினார்.

தமிழில் இரண்டு வார்த்தை பேசி னால், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்குகள் செலுத்திவிட மாட்டார்கள். தமிழக மக்களின் நலனில் எந்த அக்க றையும் கொள்ளாத பாஜக கூட்ட ணியை, தமிழக மக்கள் மொத்தமாக நிராகரித்துள்ளனர். கடந்த 10 ஆண்டு களில் உங்கள் சாதனையை கூற முடிய வில்லை. பெரிதாக நம்பிய ராமரும் உங்களை கைவிட்டார் என்பதே உண்மை, என்றார்.