districts

img

மான் வேட்டையாடிய மூவர் கைது 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

பென்னாகரம், ஏப்.12- பென்னாகரம் அருகே வனப்பகுதியில் நாட்டு துப் பாக்கியை கொண்டு இரண்டு மான்களை வேட்டை யாடியதாக வனத்துறையினர் மூன்று பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகளை பறி முதல் செய்தனர். பென்னாகரம் அருகே முதுகம்பட்டி பகுதியில் மான்கள் வேட்டையாடப் படுவதாக அடிக்கடி பென்னாகரம் வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைக்கப் பெற்று வந்தது. பென்னாகரம் வனப் பகுதிக்கு உட்பட்ட மசக்கல்  காப்புக்காடு பேகியம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள  வனப்பகுதியில் பென்னாகரம் வனச்சரக அலுவலர் முருகன் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நான்கு பேர் நாட்டுத்  துப்பாக்கிகள் கொண்டு இரண்டு மான்களை வேட்டையாடி கொண்டிருப்பது தெரியவந்த நிலையில், அவர்களை பிடித் தனர். இது குறித்து மாவட்ட வன அலுவலர் ராஜ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  அவரது உத்தரவின்பேரில் அத்தி மரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமர் (50), ஏர்கோல் பட்டியைச்  சேர்ந்த முருகன் (48), முத்தையன் (52) ஆகிய 3 பேரை பென்னாகரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, வனவிலங்கு வேட்டை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.   மேலும், வேட்டையாடுவதற்காக பயன்படுத்திய இரண்டு  நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்தனர். தலைமறைவான மோகன் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

;