தருமபுரி, ஜூலை 15- குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வரும் பிக்கிலி மலைக்கிராம மக்களுக்கு, ஒகேனக் கல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், பிக்கிலி ஊராட்சிக்குட்பட்டு 15 குக்கிரா மங்கள்உள்ளன. இதில் மலைமீது அமைந் துள்ள மலையூர், வாரக் கொல்லை மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள சக்கிலிநத்தம், தட்டப்பள்ளம் ஆகியவை மலைப்பாங்கான கிராமங்களாகும். பிக்கிலி, கொல்லப்பட்டி, பெரியூர், புதுக்கரம்பு, பூதிநத்தம், சீலூத் துக்கொல்லை, அம்மன் நகர், தண்டுகாரண அள்ளி, குறவன்தின்னை, எம்.கே.நகர், கரிப் பள்ளம், பிக்கிலி ஆதிதிராவிடர் காலனி, பெரியூர் இருளர் காலனி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு ஒகே னக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் மூலம் வழங் கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர்த் தேவைக் காகவும், கால்நடைகளுக்காவும் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடும் நிலை உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற் பட்ட ஆழ்துளைக் கிணறுகளில் சுமார் 25 குடி நீர் தொட்டிகளில் சிறுமின்விசைப்பம்பு பொருத்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந் தது. ஆனால், கடந்த ஓராண்டு காலமாக 20 ஆழ்துளைக் கிணறுகளில் பொருத்தப் பட்ட மின்மோட்டார்கள் பழுதடைந்து காணப் படுகின்றன. இதனை பழுது நீக்காமல் ஊராட்சி நிர்வாகம் உள்ளதால், இப்பகுதி யில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குடி நீருக்காக விவசாய நிலங்களிலுள்ள கிணறு களுக்கு செல்ல வேண்டிய நிலை உள் ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், ஒன்றிய முன்னாள் கவுன்சிலருமான டி.ஆர்.சின்ன சாமி கூறுகையில், இப்பகுதியிலுள்ள ஆழ் துளைக் கிணறுகளில் அமைக்கப்பட்ட இரும்பு, பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் மின் சார ஒயர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு பல மாதங்களாகிறது. ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மின்மோட் டார், குழாய்கள் என்ன ஆனது என்று கேட் டால் உரிய பதிலில்லை, என ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், அப்பகுதி கிராம மக்க ளும் கூறுகின்றனர். குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டு வரும் பிக்கிலி ஊராட்சி மக்க ளுக்கு சீரான முறையில் ஒகேனக்கல் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் நீராதாரமாக விளங்கும் ஆழ்து ளைக் கிணறுகளின் மின்மோட்டார்களை பழு துநீக்கி, குடிநீர்த் தொட்டிகள் மூலமாக அப்ப குதி மக்களுக்கு குடிநீர் வழங்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் மோட்டார்கள், குழாய்கள் உள்ளிட்ட சாதனங் களை விற்று முறைகேடு செய்யப்பட்டுள் ளதாகக் கூறப்படும் புகார் குறித்து, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
- ஜி.லெனின் –