தருமபுரி, மார்ச் 1- சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் குடியிருப்புகளுக்கு சென்று வர தார்ச்சாலை வசதி ஏற் படுத்தி தர வேண்டும் என வலியு றுத்தி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட கலசப் பாடி, அரசநத்தம், ஆலமரத்து வலசு, கருக்கம்பட்டி, தர்ஷக்காடு, கோட்டக்காடு, பொய்குண்டல வலசு உள்ளிட்ட 9 கிராமங்கள் அமைந்துள்ளன.
இந்த மலைக்கிரா மங்களில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு தற் போது வரை அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. குறிப்பாக, மலைகிராமங்களுக்கு சாலை வசதி இல்லை.
இங்குள்ள மக்கள் மருத்துவம், கல்வி உள் ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக் காக மலைப்பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் காட்டு வழியாக கீழே இறங்கி, வாச்சாத்தி கிராம வழியாக செல்ல வேண்டி உள்ளது. வாச்சாத்தி வழியாக அரூ ருக்கு பேருந்து செல்ல வேண்டும் என்றால், வரும் வழியில் காட்டாறு குறுக்கிடுகிறது. மலைகாலங்க ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தீவு போன்றாகி விடுகிறது. கோபி நாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து வாச்சாத்தி வரை சாலை வசதிகள் உள்ள நிலையில், கலசப்பாடியில் இருந்து வாச்சாத்தி வரை சரியான சாலை இல்லை. சாலை வசதி செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வரு கின்றனர்.
ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆவேசமடைந்த கல சப்பாடி உள்ளிட்ட மலைக்கிராமங் களைச் சேர்ந்த பெண்கள், மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற் பட்டோர் அரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கோபிநாதம் பட்டி கூட்ரோடு அருகே சாலை வசதி கேட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கோட்டாட்சி யர் வில்சன் ராஜசேகர், துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகநா தன், வட்டாட்சியர் வள்ளி ஆகி யோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர்.
15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக் கப்படும் என்று உறுதியளித்தனர். ஆனால், இரண்டு மாதங்கள் கடந்த பிறகும் எந்தவிதமான நடவ டிக்கையும் எடுக்கவில்லை. சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்கவில்லை என்றால், சித்தேரி ஊராட்சி மக்களின் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்துள்ள னர்.