districts

மத நல்லிணக்கம் காக்க கையெழுத்து இயக்கம்

தருமபுரி,ஜன.27- மத நல்லிணக்கம் காக்க மக்கள் ஒற்றுமை மேடை சார் பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தருமபுரி ராஜ கோபால் பூங்கா அருகில் நடைபெற்றது. மதநல்லிணக்கம், மத ஒற்றுமையை வலியுறுத்தி தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் ஜன.26 ஆம் தேதி முதல் ஜன.30 ஆம் தேதி (மகாத்மா காந்தி நினைவு தினம்) வரை ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகி றது. இதன்ஒருபகுதியாக, தருமபுரி ராஜகோபால் பூங்கா  அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் பொறுப்பாளரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளருமான எஸ்.கிரைஸா மேரி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத் தின் மாவட்டப் பொறுப்பாளர் எம்.மாரிமுத்து, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.பூபதி, சிறுபான்மையின பெண்கள் கூட்டமைப்பு தலைவர் ஜாஸ்மீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

;