districts

img

குடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு

தருமபுரி, ஜன.12- அரசு சார்பில் குடியிருப்பு வசதி ஏற்ப டுத்திதர வேண்டுமென அச்சல்வாடி அருந்த தியர் மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரி டம் முறையிட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர்வட்டம் அச்சல்வாடி கிராமம் இந்திரா நகரில் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்களில் பலருக்கு சொந்த மாக வீடுகள்  இல்லை.

ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசின் வீட்டு வசதி வாரியம் சார்பில் தங்களுக்கு சொந்த வீட்டை ஏற்படுத்தி தருமாறு நூற் றுக்கும் மேற்பட்ட அருந்ததிய மக்கள் மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.கார்த்திகாவிடம் மனு அளித்து முறையிட்டனர்.

;