districts

புறவழிச்சாலையில் சென்ற பேருந்துகளுக்கு அபராதம்

தருமபுரி, டிச. 5- ஊருக்குள் சென்று பயணிகளை ஏற் றாமல், புறவழிச்சாலையில் சென்ற தனி யார் பேருந்துகளின் உரிமையாளர்க ளுக்கு ரூ.1லட்சத்து 16 ஆயிரம் அபரா தம் விதித்து போக்குவரத்து அதிகாரி கள் அதிரடி நடவடிக்கையை மேற் கொண்டனர்.  

தருமபுரி மாவட்டத்தில் இயக்கப்ப டும் தனியார் பேருந்துகள், குறிப்பாக தருமபுரி முதல் ஓசூர் மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகள் அனுமதிக் கப்பட்ட வழித்தடமான புலிக்கரை, சோமனஅள்ளி வழியாக பாலக்கோட் டிற்கு இயக்குவதில்லை. புதியதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை யில் (என்.எச்-844) புறவழிச்சாலையில் இயக்கப்படுகிறது என தொடர்ந்து பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்த னர்.

இதனையடுத்து ஆட்சியரின் உத்தர வுப்படி வட்டார போக்குவரத்து அதிகாரி கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட னர். இதுகுறித்து தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் த.தாமோ தரன் கூறுகையில், தருமபுரி மாவட்ட  ஆட்சியரின் உத்தரவின்படி தருமபுரி  முதல் ஓசூர் மார்க்கமாக இயக்கப்ப டும் தனியார் வழித்தடப்பேருந்துகள் தங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டின்படி புலிக்கரை, சோமனஅள்ளி ஆகிய ஊருக்குள் கட்டாயமாக இயக் கப்பட வேண்டும் என எச்சரிக்கப்பட் டது.

 மேலும், புலிக்கரை மற்றும் சோமன அள்ளி ஆகிய ஊருக்குள் செல்லாமல்  தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக் கப்பட்ட 18 தனியார் பேருந்துகளுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு அப ராதம் ரூ.1லட்சத்து 16 ஆயிரம் வசூ லிக்கப்பட்டது.  அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத 1 தனியார் பேருந்தின் அனுமதிச்சீட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.  

எனவே, தருமபுரி முதல் ஓசூர்  மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து  தனியார் பேருந்துகளும் அனுமதிச்சீட் டின்படி புலிக்கரை மற்றும் சோமன அள்ளி ஆகிய ஊருக்குள் செல்லாமல்  தேசிய நெடுஞ்சாலை வழியாக இயக் கப்பட்டால் தனியார் பேருந்துகளின் அனுமதிச்சீட்டு ரத்து செய்யப்படும் என வும் புலிக்கரை மற்றும் சோமனஅள்ளி  ஆகிய ஊருக்குள் செல்லாமல் இயக் கும் தனியார் பேருந்து  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் உரிமங்கள் கட் டாயமாக ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.