districts

கோபிநாதமபட்டி கூட்ரோட்டில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

தருமபுரி, ஜன.24- பொதுமக்கள் எதிர்ப்பை மீறி கோபிநாதம்பட்டி கூட் ரோட்டில் அரசு மதுபானக்கடை அமைக்க டாஸ்மாக் நிறு வனம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை மாவட்ட நிர் வாகம் தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும் என  அப் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்பட்டி வட்டத்திற்கு உட் பட்டது கோபிநாதம்பட்டி கூட்ரோடு. இந்த பகுதியை சுற்றி சுமார் 50க்கும்  மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களை மையப்படுத்தி கோபிநாதம்பட்டி கூட் ரோட்டில் மதுபானக்கடை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு மதுபானக் கடை வேண்டாம் என வலியுறுத்தி அரசு அதிகாரி களிடம் மனு கொடுத்துள்ளனர்.

இதனை மீறி தற்போது மது பானக்கடை அமைத்து, அதனை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாவட்ட நிர்வாகம் மது கடை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல், அடுத்தகட்டமாக போராட் டங்களில் ஈடுபடுவோம் என அப்பகுதி மக்கள் எச்சரித்துள் ளனர்.

;