districts

img

அரூர் திருவிக நகரில் தேங்கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு

தருமபுரி, ஜன.24- அரூர் திருவிக நகரில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக் கும் மழைநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சிக்குட்பட்டது திரு விக நகர். இங்கு 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள் ளன.

சமீபத்தில் பெய்த மழையால் திருவிக நகரின் மேற்கு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றுள்ளது. இது தாழ்வான பகுதி என்பதாலும், முறையான கழிவுநீர் கால்வாய் இல்லாத தாலும் மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. குடி யிருப்பு பகுதியில் இவ்வாறு தேங்கும் கழிவுநீரால் அப்பகுதி யினர் கடுமையான சுகதாதார சீர்கேட்டுக்கு ஆளாகி உள்ள னர்.

இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட் சியம் காட்டி வருகிறது. ஆகவே, திருவிக நகர் மக்களின் சுகாதாரத்தை காக்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

;