districts

img

தருமபுரி மின் எரிதகன மேடை பழுதடைந்ததால் கொரோனாவால் இறந்தவர்களை விறகால் எரிக்கும் அவலம்

தருமபுரி, மே 12- தருமபுரி மின் எரிதகன மேடை பழுதால் கொரோனாவால் இறந்தவர்களை விறகால் எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  தருமபுரியில் நகராட்சிக்கு சொந்த மான மின்தகனமேடை உள்ளது. இந்த மின்தகன மேடையில் இறந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டது. தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கிருஷ் ணகிரி திருப்பத்துார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொரோனா தொற்று சிகிச்சைக்காக வருகின்றனர். கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி இறந்தவர் களை சொந்த ஊருக்கு கொண்டு செல்லாமல் தருமபுரி பச்சையம்மன் சுடுகாட்டில் உள்ள மின்தகனமேடையில் எரித்துவிடுகின்றனர்.

குறிப்பாக தினசாரி 10 க்கும் மேல் சடலங்கள் எரிக்கப்படும். கடந்த ஒருவார காலமாக எரிதகன மேடை பழுதடைந்துள்ளது. இத னால் இறந்தவர்களின் உடல்களை அங் கேயே விறகு வைத்து எரிக்கின்றனர். இத னால் மாயனமே நெருப்பில் திகைக்கிறது. இதில் இருந்து வெளியேறும் அசுத்த புகை சுற்றுவட்டார் பகுதி மக்களை பாதிப்படைய செய்கிறது. இதனால் காற்று மாசுபடுகிறது சுகா தாரம் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே பழு தடைந்துள்ள எரிதகன மேடையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர்.

;