தருமபுரி. மார்ச் 11- தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் திங்களன்று நடைபெற்ற அரசு விழா வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.350 கோடியே 50 லட்சம் செலவில் 993 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.114 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டிலான 75 புதிய திட்டப்பணிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறை களின் சார்பில் 8,736 பயனாளிகளுக்கு ரூ.95 கோடியே 54 லட்சம் மதிப்பிலான அரசு நல உதவிகளை வழங்கினார்.
அதிமுக ஆட்சியால் வேதனையே!
விழாவில் உரையாற்றிய முதல்வர், “பத்தாண்டுகளாக தமிழ்நாட்டையே சுரண்டினார்களே, அவர்களால், இப்படியெல்லாம் ஏதாவது ஒரு திட்டத்தை நிறைவேற்ற முடிந்ததா? இப்படி பட்டியலிட முடியுமா? ஏனென் றால், இந்த தருமபுரி மற்றும் கிருஷ்ண கிரி மக்களுக்கான ஒகேனக்கல் திட்டத்தையே முடக்கியதுதான் அதிமுக ஆட்சியின் சாதனை! சாதனை தான் இல்லையென்றால், அவர்களால் ஏற்பட்ட வேதனை உங்களுக்கே நன் றாக தெரியும். வேளாண் கல்லூரி மாணவிகளின் குடும்பத்துக்கு ஏற்பட்ட வேதனையை மீண்டும் விரிவாக நான் இங்கே சொல்ல விரும்பவில்லை” என்று விமர்சித்தார்.
வாச்சாத்தி மக்களுக்கு நிவாரணம்
மேலும், “பேருந்து வசதியே இதுவரை இல்லாத 8 மலைக்கிராமங்கள் பயன்பெற வத்தல்மலைக்கு முதன்முதலாக புதிய பேருந்து கடந்த ஆண்டு தொடங்கி வைத்தேன்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் 7 ஆயிரத்து 890 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றப் படும். 17 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மொரப்பூர் – தருமபுரி புதிய அகல ரயில் பாதைக்கு நில எடுப்புப் பணிகள் நடைபெறுகிறது. வெண்ணாம்பட்டி சாலையையும், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கின்ற வகையில் பாரதிபுரத்தில் 36 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான மலைப்பகுதிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சமுதாய நலக்கூடங்கள் நான்கு கோடியே நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்! எந்த ஆட்சியில் நடந்தது என்றும் மறந்திருக்க மாட்டீர்கள்! ஆனால், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்க ளுக்கு திமுக ஆட்சியில்தான் விடியல் பிறந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு தலா ரூ.10 லட்சம் என்று மொத்தமாக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும்” என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
இவ்விழாவில், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செ.செந்தில் குமார். ஏ.செல்லக்குமார், எஸ்.ஆர்.பார்த்தி பன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி, எஸ்.பி.வெங்கடேஸ்வரன், ஒய்.பிரகாஷ், டி.மதியழகன், பி.ராமச்சந்திரன், தருமபுரி ஆட்சியர் கி.சாந்தி, முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் தடங்கம் பி.சுப்பிரமணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.