districts

img

சாலை ஓரம் இருந்த பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து : 4 பேர் பலி

அரூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தர்மபுரி மாவட்டம் , அரூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் சாலை ஓரத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தங்கமணி (52) என்பவர் உயிரிழந்தார். 
இது குறித்து அரூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

;