தருமபுரி, டிச. 9- தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலு வலகத்தை மூடும் ஒன்றிய அரசின் உத்தரவைகைவிடக்கோரி அனைத்து கட்சிகள் சார்பில் தரும புரி தலைமை தபால் நிலையம் முன்பு திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தருமபுரி அஞ்சல் பிரிப்பகம் கடந்த 1982 முதல் சுமார் 42 வரு டங்களாக செயல்பட்டு வருகிறது. தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவல கத்தில் சுமார் 25 நிரந்தர ஊழியர்க ளும், 10 தற்காலிக ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தில் மாலை 5:30 முதல் 8:30 வரை பதிவுத்தபால், விரைவுத்தபால், பார்சல் தபால் சேவைகளை வணிகர்கள், பொதுமக்கள், வழக் கறிஞர்கள் பயன்படுத்தி வரு கின்றனர். தினந்தோறும் 2500 பதிவு தபால்கள், மற்றும் 20000க்கும் மேற்பட்ட சாதாரண தபால்கள் மற் றும் 400 மேற்பட்ட பார்சல்களை கையாண்டு வருகிறது.
அஞ்சல் நிர்வாகம் கடந்து 5.12.2024 அன்று தருமபுரி அஞ் சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத் தரவினை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம் பொதுமக்கள் வணிகர்கள் வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப் படுகின்றனர். சேலம் அஞ்சல் பிரிப் பகத்துடன் இணைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் தபால்கள் காலதாமதமாக கிடைக் கும். எனவே, தருமபுரி அஞ்சல் பிரிப்பகத்தை சேலம் அஞ்சல் பிரிப்பகத்துடன் இணைக்கும் உத்திரவினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட செயலாளர் தடங்கம் பெ. சுப்பிர மணி தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர். சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுனன், எஸ்.கிரைஸாமேரி, வே.விசுவநா தன், ஆர்.மல்லிகா, நகரச் செயலா ளர் ஆர். ஜோதிபாசு, ஒன்றியச் செய லாளர் கே.கோவிந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கலை செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தீர்த்தராமன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கள் த.கு.பாண்டியன், இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் என். சுபேதார், அகில இந்திய அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர். இதில் திரளா னோர் பங்கேற்றனர்.