கும்பகோணம் அக்.17- தகவல் பலகை சரிந்து விழுந்ததில், அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் படுகாயமடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றி யம், ஏனாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட தண்டா ளம் மணவெளித் தெருவில் வசிக்கும் இரு சக்கர வாகன மெக்கானிக்கான மாரியப்பன் - அனுசியா தம்பதியினரின் மகன் தர்ஷன் (12). இவர் கும்பகோணம் சிறியமலர் மேல் நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுவன் வீட்டிற்கு அருகில் கடந்த 2012-13 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு, இந்த நீர்த்தேக்க தொட்டி அருகில் நிலத்தடி நீர்மட்டத்தை பராமரிக்க, தொட்டியில் இருந்து வரும் உபரி நீரையும், மழை நீரை யும் சேகரிக்கும் வகையில் 4.5 அடி நீள, அகலம், 3 அடி உயரத்தில் தரைமட்ட அளவில் தொட்டி கட்டப்பட்டது. அதற்கு அருகி லேயே, இதற்கான தகவல் பலகையும் சிமெண்ட் சுவரில் அமைக்கப்பட்டிருந்து. இந்நிலையில், சிறுவன் தர்ஷன் மற்றும் அவனுடன் சேர்ந்து சில சிறுவர்களும் மழை நீர் சேகரிப்பு தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராவித மாக திடீரென சிமெண்ட் சுவர் இடிந்து விழுந்ததில், சிறுவன் தர்ஷன் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். இதில் தர்ஷனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கும்பகோணம் அருகே உள்ள தனி யார் மருத்துவமனையில் சிறுவன் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அலு வலர்களுக்கு தகவல் அளித்தும், இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், தமிழக அரசும், தஞ்சை மாவட்ட நிர்வாக மும், விரைந்து ஏனாநல்லூர் ஊராட்சியில், சமீபத்தில் கட்டப்பட்ட மழைநீர் சேகரிப்பு தொட்டிகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட சிறு வனின் தந்தை மாரியப்பன் தெரிவித்துள்ளார்.