districts

இன்று முதல் வழக்கம்போல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், மார்ச் 6- மார்ச் 7 அன்று திங்கள்கிழமை முதல் வழக்கம்போல் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘‘பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை தோறும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.  இந்நிலையில் கொரோனா தொற்றுப் பர வலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறாமல், ஆட்சியர் அலுவலக வாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுப்பெட்டிகள் மூலம் மனுக்கள் பெறப்பட்டு தொடர்பு டைய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன.  தமிழக முதல்வரின் உத்தரவின்படி, மார்ச்.7 முதல் ஒவ்வொரு திங்கள்கிழமை தோறும் கொரோனா நிலையான வழி காட்டு நடைமுறைகளை பின்பற்றி பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  எனவே, பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து. சமூக இடைவெளியினை கடை பிடித்து மனுக்களை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிடலாம்’’ என தெரி விக்கப்பட்டுள்ளது.

;