districts

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி தர்ணா

தஞ்சாவூர், மே 28-  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதி யத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அவுட்சோர்சிங், ஒப்பந்த முறையை ரத்து  செய்ய வேண்டும். கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட் டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் சார்பில், தஞ்சை பனகல் கட்டிடம் அருகில்  நடைபெற்ற போராட்டத் திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சிவ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.செல்வி வர வேற்றார். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் துவக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ரெங்கசாமி கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஹேமலதா நிறை வுரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் ரவிச்சந்தி ரன் நன்றி கூறினார்.  புதுக்கோட்டை புதுக்கோட்டை சிறைச் சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சே.ஜபருல்லா தலைமை வகித்தார். போராட் டத்தை தொடங்கி வைத்து  மாநில செயலாளர் ச.ஹேம லதா உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாநிலச் செயலாளர் க.தமிழ் மணி, மாவட்டச் செயலாளர் இரா.ரெங்கசாமி மற்றும் தோ ழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர். போராட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் உரையாற்றினார்.  கரூர் தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் மாவட்ட குழு  சார்பில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  நடை பெற்ற தர்ணா போராட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சங்கத் தின் மாநிலச் துணைத் தலை வர் மு.செல்வராணி போராட் டத்தை துவக்கி வைத்துப் பேசினார். சிஐடியு மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.