districts

img

தஞ்சை பெரியகோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தஞ்சாவூர், ஏப்.13 -  தஞ்சாவூர் பெரியகோயி லில் சித்திரை பெருவிழா தேரோட்டம், கடந்த இரண்டு  ஆண்டுக்கு பிறகு புதன் கிழமை கோலாகலமாக நடந் தது. இதில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். உலகப் பிரசித்தி பெற்ற, தஞ்சாவூர் பெரியகோயிலில் சித்திரை பெருவிழா ஆண்டுதோறும் 18 நாட்கள் விமரிசையாக நடைபெறு வது வழக்கம். அதன்படி, கடந்த மார்ச் 30 ஆம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட் டத்தை முன்னிட்டு, புதன் கிழமை அதிகாலை 5:30 மணிக்கு கோவிலில் இருந்து  மேள, தாளங்கள் முழங்க பஞ்ச மூர்த்திகளும், முத்து மணி அலங்கார சப்பரத்தில்  புறப்பட்டு மேல வீதியில் உள்ள  தேர்நிலை மண்டபத்திற்கு வந்தடைந்தது.   பின்னர் காலை 7  மணிக்கு தேரோட்டத்தை ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி, மாநகராட்சி கமிஷனர் சரவணக்குமார், பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, அரண்மனை தேவஸ்தான அதிகாரிகள் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுக்குப் பிறகு தேரோட்டம் நடந்தால், ஆயி ரக்கணக்கானோர் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.