districts

img

விவசாயிகளுக்கு  இடுபொருட்கள் வழங்கல்

பாபநாசம், செப்.22- தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேளாண்மைத் துறை அட்மாத் திட்டம் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா  நடைபெற்றது. இதில், திருவையாறு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வர் அரசாபகரன் விவசாயிகளுக்கு இடுபொருட்களான காய்கறி கூடை, 50 சதவீத மானிய விலையில் பாரம்பரிய நெல்  ரகமான கருப்பு கவுனி, மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின்  கீழ் 16 லிட்டர் கொள்ளளவு கொண்ட பேட்டரி தெளிப்பான்  ஆகியவற்றை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) சுஜாதா, அட்மா மேலாளர் ஜெயபிரபா, உதவி மேலாளர் கள் மங்களேஸ்வரி, சாந்தகுமாரி, உதவி அலுவலர் வெங்க டேசன் ஆகியோர் செய்திருந்தனர்.

;