தஞ்சாவூர், அக்.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர் மாநில அளவிலான சைக்கிள் பந்தயப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேராவூரணி அரசு மேல்நிலைப்பள்ளி, 12 ஆம் வகுப்பு மாணவர் கே.இன் பன் கார்த்தி, பாபநாசத்தில் அக்டோபர் 17-ஆம் தேதி நடைபெற்ற, 19 வயதுடைய வருக்கான சைக்கிள் பந்த யப் போட்டியில் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றார். இதன் மூலம் இவர் மாநில அளவிலான போட்டிக்கு பங்கு பெற தேர்வு செய்யப் பட்டுள்ளார். இதேபோல் இப்பள்ளி யில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள், 17 வயது பிரிவு ஆண்கள் கபடிப் போட்டி யில் மாவட்ட அளவில் இரண் டாம் இடம் பெற்றுள்ளனர். வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர் களுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் சி.முதல்வன், உடற்கல்வி ஆசிரியர்கள் ந. திருநாவுக்கரசு, மா.சோலை, ச.முத்துராமலிங்கம் உள் ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.