வல்லம், டிச.22- தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத் தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) சாலை விபத்து கள் குறித்து மாநில அளவிலான கள ஆய்வு மேற்கொண் டனர். சாலை விபத்துகள் குறித்த 2021 – 2022 ஆம் ஆண்டிற்கான கணக்கெடுப்பில், புவியியல் தகவல் அமைப்பு மென்பொருளைப் பயன்படுத்தி, தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிக விபத்துகள் நடக்கும் இடங்களை, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகக் கட்டடப் பொறி யியல் துறையைச் சார்ந்த 10 மாணவர்களும், 2 பேரா சிரியரை உள்ளடக்கிய குழு கண்டறிந்துள்ளது. இக்குழுவுக்கு தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். மாணவர்களையும், பேராசிரியர்கள் நரேந்திர பிரசாத், கார்த்திக் ஆகியோ ரையும் பல்கலைக்கழக துணைவேந்தர் செ.வேலுச் சாமி, பதிவாளர் பி.கே.ஸ்ரீவித்யா, பேராசிரியர்கள், பணியாளர்கள் பாராட்டினர்.