districts

img

பழுதடைந்து நிற்கும் நிழற்குடைகள்!

பாபநாசம், ஜூன் 7 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலை 16 கிலோ மீட்டர் தூரம் உடையது. இந்த  சாலையில் திருவையாத் துக்குடி, மேல செம்மங்குடி, திருக்கருக்காவூர், இடை யிருப்பு, இரும்பு தலை, களஞ்சேரி உள்ளிட்ட ஊராட் சிகளில் ஏராளமான கிரா மங்கள் உள்ளன. 

இந்தச் சாலையில் பல பயணியர் நிழற்குடைகள் உள்ளன. அவற்றுள் பல  நிழற்குடைகள் பழுத டைந்து, மக்களுக்கு பயன ளிக்கக் கூடியதாக இல்லை. மழைக்கு கூட ஒதுங்கக் கூடிய நிலையில் உள்ளன. சில நிழற்குடைகள் மதுப் பிரியர்களின் பாராக மட்டுமே பயன்படுகின்றன.  

இதுகுறித்து சமூக ஆர் வலர்கள் கூறுகையில், “பாப நாசம் - சாலியமங்கலம் சாலையில் சில நிழற்குடை கள் மட்டுமே மக்கள் பயன் பாட்டில் உள்ளன. சில  நிழற்குடைகள் பழுத டைந்து, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சில இடங்களில் தேவையில்லாமல் நிழற் குடைகள் கட்டப் பட்டுள்ளன. பழுதடைந்த நிழற் குடைகளையும், பயனற்ற நிழற் குடைகளையும் இடித்து விட வேண்டும்.  இடித்த நிழற்குடை களுக்குப் பதில் தேவை யான இடங்களில் மட்டுமே நிழற் குடைகளை கட்ட வேண்டும். மக்கள் பயன் பாட்டில் உள்ள நிழற்குடை களில் பழுது பார்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.