தஞ்சாவூர், நவ.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், பெரியநாயகிபுரம் ஊராட்சி ஆவணம் அகமுடையார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறுதானியங்கள் பயன்பாடு, சத்துகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்பு ணர்வு கண்காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் செல்வேந்தி ரன் கலந்து கொண்டு, சிறுதானிய உணவுகளின் முக்கியத்து வம், பயன்களை எடுத்துரைத்தார். மேலும், ஆவணம், வாட்டாத்திக்கோட்டை, ஏனாதி கரம்பை, புனல்வாசல் பள்ளிகளின் சத்துணவு அமைப்பா ளர்கள் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளான சாமை அரிசி, வரகு அரிசி, தினை அரிசி, கேழ்வரகு, கம்பு, சோளம் மற்றும் கொண்டைக் கடலை ஆகியவற்றில் உணவு தயாரித்து மாணவ, மாணவிகளுக்கு வழங்கினர். விழாவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ச.உ.தி) ஆண்டனி ஜான் பிரிட்டோ, ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்து ராமன், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.