தஞ்சாவூர், மே 24 - தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவல கத்தில், கோட்டாட்சியர் தலைமையில் நடை பெற்ற வருவாய் கோட்ட அளவிலான விவசா யிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன் அளித்த கோரிக்கை மனுவில், ஆற்றுப் பாசனக் கோட்டம் திருச்சி பகுதியிலிருந்து, தஞ்சை மாவட்டம் பூதலூர் மற்றும் தஞ்சை தாலுகாவில் பாசனம் பெறும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் 20 ஏரிகளும், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 62 ஏரிகளும் பாசனம் பெற்று வருகின்றன. இந்தப் பாசனப் பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் கடைமடைப் பகுதிக்கும் தண்ணீர் சென்று சேருவதில் மிகச் சிரமமான நிலைமை உள்ளது. எனவே தற்போது உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதிகளை உடனே தூர்வார வேண்டும். அதேபோல் அனைத்து மதகு கள், குமிழிகள், ஏரிக்கு செல்லும் பிரிவு வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுத்திட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.