districts

பகுதி நேர அங்காடியை செயல்படுத்த கோரிக்கை

தஞ்சாவூர், ஆக.16 -  பகுதி நேர அங்காடியை செயல்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் பெரியகத்திக்கோட்டை கிளை கோரிக்கை விடுத்துள் ளது. மேலும், அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி, 15 நாட்களுக்குள் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேதுபாவா சத்திரம் ஒன்றியம், பெரியகத்திக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம் கிளைச் செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் ஆர்.எம். வீரப்பெருமாள் கட்சிக் கொடியேற்றி வைத்துப் பேசினார். 

;