பாபநாசம், ஜூலை 17 - மின் கட்டண உயர்வை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு முயற்சிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி யின் மாநிலத் தலைவரும், பாபநாசம் எம்.எல்.ஏ-வுமான ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சார கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒன்றிய அரசின் மின் அமைச்சக வழிகாட்டுதலின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியைப் பெற, ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்த வேண்டும் எனும் முன் நிபந்தனையின் அடிப்படையில், இது நடந்திருப்பதாக விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது.
அனைத்து வீட்டு மின் நுகர்வோர் களுக்கும் 100 யூனிட் வரை விலை யில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப் படும் என்றும், குடிசை இணைப்பு களுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படுமென்றும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகை யில், தமிழ்நாட்டில் அனைத்து வகை மின் பயனீட்டாளர் கட்டணம் குறைவாக இருந்த போதிலும், தற்போதைய மக்க ளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, இந்த கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த விலை உயர்வின் காரணமாக நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு, குறு நிறு வனங்களும், வியாபாரிகளும் பெரும ளவில் பாதிப்புக்கு உள்ளாவர். மின் நுகர்வோர் தலையில் சுமத்தப்பட்டி ருக்கும் இந்த விலை ஏற்றத்தை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.