தஞ்சாவூர், நவ.22 - தஞ்சாவூரில், பொலிவுறு நகரத் திட்டத் தின் கீழ் புனரமைக்கப்பட்ட காமராஜர் சந்தையை, சென்னையிலிருந்து தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். தஞ்சாவூர் அரண்மனை வளாகம் அருகேயுள்ள காமராஜர் காய்கனி சந்தை யில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் 4.1 ஏக்கர் பரப்பளவில் ரூ.20.26 கோடி மதிப்பில் புதிதாகக் கடைகள் கட்டப்பட்டன. இதில், 201 சிறிய கடைகள், 87 பெரிய கடைகள், குடிநீர் வசதி, ஏடிஎம் மையம், கண்காணிப்பு கேமராக்கள், நிர்வாக அறை, தீயணைப்பு வசதி, ஜெனரேட்டர் வசதி, கழிப்பறை, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்து மிடம், 219 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் இந்தச் சந்தை கட்டப்பட்டுள்ளது. ஸ்கேட்டிங் மைதானம் இதேபோல, தஞ்சாவூர் 51 ஆவது வார்டிலுள்ள பி.ஏ.ஒய். நகரில், பொலி வுறு நகரத் திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் ரூ.1.95 கோடி மதிப்பில் 10,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த மைதானம் அமைந்துள்ள பூங்காவில் சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், மைதானத்தை சுற்றிலும் நடைபாதையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காமராஜர் சந்தையை யும், ஸ்கேட்டிங் மைதானத்தையும் சென்னையிலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, தஞ்சா வூரில் பொதுமக்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன் (திரு வையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சா வூர்) உள்ளிட்டோர் இனிப்புகள் வழங்கி னர். விழாவில், தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் க.சரவண குமார், செயற்பொறியாளர ் எஸ்.ஜெகதீசன், மண்டலக் குழுத் தலைவர்கள் பங்கேற்ற னர். காமராஜர் சந்தையில் விரைவில் கடைகளை திறக்கவுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.