districts

img

மாநகராட்சியின் நிரந்தர பணியிடங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், நவ.5-  மாநகராட்சி, நகராட்சி களில் உள்ள நிரந்தப் பணி யிடங்களை, தனியார் மய மாக்குவதை கண்டித்து  தமிழ்நாடு நகராட்சி, மாநக ராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்ட;j துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.மதிவாணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்றோர் நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகி சிவசுப்பிரமணியன், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. ரெங்கசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் டி.ரவிச் சந்திரன், மருத்துவத்துறை ஆய்வக தொழில்நுட்ப சங்க  மாநில பொதுச் செயலாளர் எம்.என்.சாந்தாராமன் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். மாநகராட்சி, நகராட்சி களில் துப்புரவு பணியாளர் கள், பில் கலெக்டர்கள் உள் ளிட்ட பல்வேறு நிரந்தரப் பணியிடங்களை தனியார் மயமாக்கும் அரசாணை எண்.152-ஐ ரத்து செய்ய  வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. தஞ்சாவூர் மாநக ராட்சி அலுவலர்கள், துப்பு ரவு பணியாளர்கள் என ஏரா ளமானோர் கலந்து கொண்ட னர்.
கும்பகோணம்
கும்பகோணம் மாநக ராட்சி அலுவலகம் முன்பு, சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோரிக்கை முழக்க கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னர். இதற்கு உள்ளாட்சி ஊழியர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் ஜேசு தாஸ் தலைமை வகித்தார். சிஐடியு தஞ்சை மாவட்ட துணை தலைவர் சா.ஜீவ பாரதி, மாமன்ற உறுப்பினர் செல்வம், சிபிஎம் மாநகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.