districts

பெரியார் மணியம்மை பல்கலை.யில் 273 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை

தஞ்சாவூர், மார்ச் 24 -  தஞ்சாவூர் அருகேயுள்ள வல்லம் பெரி யார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிலும் கலை, அறிவியல், மேலாண்மை வணிக வியல் துறைகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வேலை வாய்ப்புக் கான நேர்காணல் முகாம் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு  மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வை பல்கலை.துணை வேந்தர் செ.வேலுசாமி துவக்கி வைத்தார். பதிவாளர் பி.கே.சிறீவித்யா, கல்விப்புல முதன்மையர் ஏ.ஜார்ஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  வேலைவாய்ப்பு நேர்காணல் மற்றும் தகுதித் தேர்வில் கணினி அறிவியல், கணினி  பயன்பாட்டியியல், மேலாண்மை, வணிக வியல், இயற்பியல், வேதியியல், கணிதம், சமூக அறிவியல், அரசியல் அறிவியல் துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் நடைபெற்ற நேர்காணலில் 273 மாணவ, மாணவிகள் பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொண்டனர். முகாமில்  காயின்டிஸ் மென்பொருள், ஸ்டேட் ஸ்ட்ரிட் லிமிடெட், அல்செக் தொழில்நுட்பம், ஆல்ட்ரஸ்ட் டெக்னாலஜி  அப்பல்லோ மருந்தகம் உள்ளிட்ட 16 நிறு வனங்கள் கலந்துகொண்டன. முகாமை வேலைவாய்ப்புத்துறை இயக்குநர் பி.குரு, ஆங்கிலத் துறை  இயக்குநர் கே.செல்வம் ஆகியோர்  ஒருங்கிணைத்தனர்.