districts

சிஐடியு போராட்டத்தால்  கொத்தங்குடி மாட்டுவண்டி மணல் குவாரி திறப்பு

கும்பகோணம், மே 2 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கொத்தங்குடி மணல் குவாரியில் சுமார் ஆயிரம்  மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்திவந்தனர். ஆனால் திடீரென்று மணல் அள்ள, கனரக வாகனத்திற்கு மட்டும் அனுமதி அளித்துவிட்டு மாட்டுவண்டி தொழிலாளர்கள் அள்ளக்கூடாது என உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து சிஐடியு தஞ்சை மாவட்டம் சார்பில் கொத்தங்குடி மணல் குவாரியில் மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள உரிமை வேண்டும் என ஓராண்டு காலமாக போராடி வந்தனர். இந்நிலை யில் தமிழ்நாடு நீர்வள ஆதாரத் துறையினர் கொத்தங்குடி மணல் குவாரியில், மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதித்த னர். இதன் தொடக்க நிகழ்ச்சி மே 2 (திங்கட்கிழமை) துவங்கியது.இதில் 300-க்கும்மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளினர்.  இது சம்பந்தமாக சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் தெரிவிக்கையில், ஓராண்டாக  கொத்தங்குடி மணல் குவாரியில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள பலமுறை நடத்திய போராட்டத்திற்கு பிறகு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் கடந்த ஆட்சியில் 25 கனஅடி மணல் அள்ளுவதற்கு ரூ.224 கட்டணம் வசூலித்தது. ஆனால் தற்போது 700 ரூபாயாக உயர்த்தி யிருப்பது தொழிலாளர்களை மிகவும் சிரமத்துக்குஉள்ளாகி வருகிறது.

இதை தமிழக அரசு பரிசீலித்து கடந்த ஆட்சியில் வசூலித்த 25 கனஅடிக்கு 224 ரூபாய் வசூலிக்க வேண்டும். மணல் அள்ளும் அனுமதியை அரசே ஏற்று நடத்த வேண்டும். தனியாருக்கு விடுவதால் சில குளறுபடிகள் நடக்க வழிவகை செய்யும். ஆகவே அரசே இதை நடை முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சிஐடியு சார்பில் தெரிவிக்கிறோம் என்றார்.  கொத்தங்குடி மணல் குவாரி திறப்பு நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செய லாளர் நாகராஜன், சிஐடியு மாவட்டபொருளாளர் எம்.கண்ணன், மாவட்ட துணைத் தலைவர் ஜீவபாரதி, ஏசுதாஸ், கும்பகோணம் மாமன்ற உறுப்பினர் செல்வம், மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் கும்ப கோணம் லட்சுமணன், திருவிடைமருதூர் கோவிந்தராஜ், தாராசுரம் தங்கை யன், பாபநாசம் நாகராஜன், பூதலூர் இமானுவேல், ரமேஷ், முத்துக் குமார் உள்ளிட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.